Friday, 8 November 2013

தோள் சாய வா பெண்ணே!

கால் வலிக்க நடை பழகி 
களைப்பாகி போனாலும் 

இளைப்பாற 
தோள் சாய்வாய் பெண்ணே!

மழையோடு நீயிருந்து
குடையோடு நானிருந்தும் 

தலை துவட்ட 
தோள் சாய்வாய் பெண்ணே! 

எதிர் வரும் காலங்கள் 
எதிர்க்கின்ற போதிலும் 

இமைக்காமல் 
தோள் சாய்வாய் பெண்ணே! 

நேசமோ - நட்போ 
உயிர் போகும் ஒருநாளில் 

அழைக்காமல் 
தோள் சாய்வாய் பெண்ணே!

- மன்சூர்

No comments:

Post a Comment