Friday, 3 February 2017

"போதும் கவிஞரே"

உன்
-கார்மேக கூந்தல் சூழ்ந்து

என்
-கவிதை மழை பெய்யும் போதெல்லாம்

உன்
-முந்தானை குடைபிடித்து

உன்
-புன்னகை மின்னல் ரசிக்க வேண்டும்

உன்
-கருவிழியின் மை கொண்டு
நான்
-காகிதத்தில் கிறுக்கும் போது

என்
-காதுமடலை காதலோடு
நீ
-கடிக்க வேண்டும்

உன்
-செவ்விதழின் சாயம் கொண்டு
நான்
-செவ்வாய் ரசம் வைக்க

நீ
-"போதும் கவிஞரே" என்று சொல்ல
நான்
- செல்லமாய் கோபம் கொள்ள வேண்டும்.

- மன்சூர்


No comments:

Post a Comment