Friday, 3 February 2017

ஏன்?

நாணம் கொண்ட நாணலே
நளினம் கூடி போனதேன்?

தலை கவிழ்ந்த தாமரையே
இதழ்கள் விரித்தும் தயக்கம் ஏன்?

தோகை விரித்த மயிலே
மேகம் சூழ்ந்தும் நிசப்தம் ஏன்?

அழகு பூக்கும் அல்லி பூவே
அரும்ப மறுக்கும் காரணம் என்ன

சிறகு முளைத்த செங்குயிலே
சிறகடிக்க மறந்தது ஏன்?

உலக பூக்களின் அணிவகுப்பே
புன்முறுவலின் ரகசியம் என்ன?

- மன்சூர் 

No comments:

Post a Comment