Friday, 3 February 2017

மையல்

பூக்களுக்கு மத்தியில்
புன்னகை வீசும் புயலே,

வாசம் கொண்ட பூக்கள் மீது
நேசம் கொள்ள வந்தாயோ!

நேசம் கொண்டு
நேசம் கொண்டு
நெஞ்சை கிள்ள வந்தாயோ!

வண்ணம் கொண்ட பூக்களையெல்லாம்
கன்னம் வைக்க வந்தாயோ!

மையல் கொள்ளும் பேரழகே
எந்த புயலின் சின்னம் நீ!?

இதய கரையில் மையம் கொண்டு
என்னை கொல்ல வந்தாயோ??

- மன்சூர்


No comments:

Post a Comment