Friday, 8 November 2013

சேலையில் ஒரு தேவதை!

சேலை கட்டும் பெண்களில் 
அவள் மட்டும் 
தனி அழகு!

அவள்..
சேலையணிந்து சென்றால் 
துணிக்கடை பொம்மையும் 
உயிர் பெறும்!

வீதியுலா சென்றால் 
சாலையோர மனிதரெல்லாம் 
சிலையாய் மாறக் கூடும்!

அவளை கடந்து செல்லும் 
தென்றல் கூட 
உறைந்து போகும் பனியாக!

என்னவாக போகிறேனோ 
இன்னும் கொஞ்ச நாளில் நானும் ?

- மன்சூர்

No comments:

Post a Comment