Friday, 8 November 2013

மல்லிப்பூ ..

நடு நிசியில் 
மலர்ந்து 

நூற்பாவில் 
சேர்ந்து 

நடைவீதியில் 
கடை பரப்பி 

உன் கண்ணில் 
விழுந்து 

நீயும்
வாயாரக் கேட்டு 

நானும் 
மனதார வாங்கி 

என் கையாலேயே 
சூட 

"ஈ"யென பல் இளிக்கிறது  

உன் கூந்தலேறிய 
மல்லிப்பூ ..


- மன்சூர் 

No comments:

Post a Comment