Thursday, 31 October 2013

பாலை

நீந்த தெரியாத பாலைவன-கப்பல்
நேசிக்க தெறியாத இதயம் 

இரண்டுக்கும்
சஹாரா தான் உலகம்

- மன்சூர் 

கனவு தேசம்

ஆட்டையை போடும் அறுபதுகளும் 
அரட்டை அடிக்கும் இருபதுகளும் 
சீராகும் வரை 

சீராகாது 
நம்-தேசம் 

-மன்சூர்

மௌனம்..

இங்கே சிலர் .,

வார்த்தைகளை 
விழுங்கி கொண்டு 

மௌனங்களின் 
புளித்த ஏப்பம் விடும் 

நண்பர்கள் 

- மன்சூர்

கவிதையின் ருசி

காகிதங்களை ருசிக்கும்
கோவேறுகளுக்கு 

தெரியாது
கவிதையின் ருசி 

- மன்சூர் 

ஏழையின் சிரிப்பில் ...

பசித்தோர்க்கு இலையிட்டு 
அவர்-தம் புன்னகையில் 
தெரியாத இறைவனையா?

வெறும்
கல்லுக்கு பாலூற்றி 
தேடுகிறாய் மா மனிதா!

- மன்சூர் 

faceBook

faceBook(முகநூல்)

தன் பதிவுகளுக்கு தானே 
வலிய வந்து விருப்பம் தெரிவிக்க கோறும் 
விந்தையான சந்தை!

போலி முகமூடிக்கு பின்னாலிருந்து 
சொற் போர் புரியும் 
பல அற்பங்களும் இங்கே உண்டு 

முகமூடி அணிந்து கொண்டு
மட் போர் புரியும்
சில சிற்பங்களும் உண்டு

சிலருக்கு
இது வேடிக்கை

பலருக்கும் இதுவே
வாடிக்கை

இங்கே
பெண்களின் நிழற் படங்களுக்கு கூட
பாதுகாப்பு இல்லை

ஆபாச சந்தையில்
அவற்றை
கூறு போட்டு விற்கின்றன சில
கூறு கேட்ட குப்பன்கள்

faceBook
நீச்சல் தெரிந்தவர்கள்
மூழ்கி போகும்
பாசி படிந்த
குட்டை

- மன்சூர்

நேசம்..

நேசத்தை விட்டு கொடுத்தேன்

தவிர

உன்னை 
நேசிப்பதை அல்ல

பெண்ணே ..

- மன்சூர் 

காதல் - திருவிளையாடல்

பிரிக்க முடியாதது
நீயும், உன் கோபமும்

பிரிய கூடாதது
நீயும், உன் குணமும்

சேர்ந்தே இருப்பது
சிரிப்பும், சிங்காரமும்

சேரக் கூடாதது
அழுகையும், அகங்காரமும்

சொல்ல கூடாதது
உன்னிடம் காதலை

சொல்லக் கூடியது
உன்னிடம் ரகசியத்தை

பார்க்க கூடாதது
உன் கண்கள்

பார்த்து ரசிப்பது
உன் கூந்தல்

ரசனை என்றால்
உன் சமையல்

சண்டைக்கு
நீ

நட்புக்கு
நான்

அழகுக்கு
நீ

அன்புக்கு
நான்

********

- மன்சூர் 

வின்னை தாண்டி வருவாயா?

பார்வையால் அறிமுகம் ஆனோம்,
மௌனங்களால் பேசிக் கொண்டோம்,

நெடுஞ்சாலை தூரம் எல்லாம் 
கை கோர்த்து நடந்து சென்றோம்,

சிறு சிறு சண்டைகளில் 
பிரியாமல் நேசம் செய்தோம்,

கண்முன் பேசாமல் 
கனவுகளில் சிநேகம் செய்தோம்,

உறவுகளிடம் அனுமதி வாங்கி,
ஆயுள் வரை அன்பு செய்ய
இதயம் துடிக்கிறது - உன்னை
வெளியே அழைக்கிறது

வீடு தாண்டி வருவாயா ?

- மன்சூர்

கொலைஞன்

பூக்களை
கொய்கிறான்

கொலைஞன்

காதல்
பூத்திட..

- மன்சூர் 

நெல்லை அல்வா

சுவைத்தால் மணக்கும்
மனதை உருக்கும்
உமிழ்நீர் சுரக்கும்
சுவையின் அதிசயம்

தாமிரபரணி ஆற்றுத் 
தண்ணீரோ
இல்லை
தாய் மனம் கொண்ட
பக்குவமோ

அத்தை வீட்டு சீதனம் போல் சுவைக்கும்
அல்வாவை
என்னவென்று சொல்வது? 

- மன்சூர் 

MAD

I still love you.
I still miss you.
I still need you.

I still dream of you.

I still care for you.
I just wish I could tell you.

I want to be yours

Not for a day,
Not for a year,

For a lifetime

I love you madly ♥ ..

- மன்சூர் 

பதிவு திருமணம்

எத்தனை முறை 
பேனா வாங்கினாலும் 

கையொப்பமிட்டு பார்க்கிறது 
மனசு
நாம் இணையும் 
அந்த ஒரு நாளுக்காக ♥ ..

- மன்சூர்