Thursday, 31 October 2013

காதல் - திருவிளையாடல்

பிரிக்க முடியாதது
நீயும், உன் கோபமும்

பிரிய கூடாதது
நீயும், உன் குணமும்

சேர்ந்தே இருப்பது
சிரிப்பும், சிங்காரமும்

சேரக் கூடாதது
அழுகையும், அகங்காரமும்

சொல்ல கூடாதது
உன்னிடம் காதலை

சொல்லக் கூடியது
உன்னிடம் ரகசியத்தை

பார்க்க கூடாதது
உன் கண்கள்

பார்த்து ரசிப்பது
உன் கூந்தல்

ரசனை என்றால்
உன் சமையல்

சண்டைக்கு
நீ

நட்புக்கு
நான்

அழகுக்கு
நீ

அன்புக்கு
நான்

********

- மன்சூர் 

No comments:

Post a Comment