Sunday, 5 April 2015

Soul mates

I was nothing till
They comes into life
They makes me laugh
           makes me cry
           makes my life worthy

Distance is not a matter
Though we were not in touch now
They are not just friends
They are above to all

Thursday, 2 April 2015

செம்பூவே



தீ பற்றாத
பூக்காடோ
உன் கண்கள்

தேய் பிறை இல்லாத
வானமோ
உன் நெற்றி

கந்தகமாகி போன
காந்தங்கள் தானோ
உன் கண்கள்

தொங்கல் தோட்டத்தின்
அனிச்சம் பூவோ
உன் செவிகள்

வண்டுன்னும்
செம்பூவோ
உன் இதழ்கள்

நேசத்திற்காக துடிக்கும்
நெஞ்சமோ - உன்
நல் இதயம்..

- மன்சூர்

உண்மை காதல்


உனக்காக
எழுதி தீர்க்கும் - என்
கவிதைகளை - நீ

கண்டும், காணாமல்
போகும் போது

எனக்காக
அழுது தீர்க்கும் - என்
பேனாவிடம்
பார்கிறேன்

உண்மை காதலை..

- மன்சூர்

கண்மூடி பிறந்த பிழை

கண்ணாளனே ,
உறங்க இடம் வேண்டும்

கண்மணியே,
என் மடியிலா ? கடற்கரையிலா ?

ம் ஹூம், ஆசை தான்
கடற்கரை போதும் எனக்கு

சரி சரி,
அலை வந்து, அள்ளி கொள்ள போகிறது
இன்று வேறு
பௌர்ணமி என்கிறார்கள்

ஏன்? அது
ஆண் அலையா?

அது ஆண் அலையோ? - இல்லை
காதல் வலையோ?
யாருக்கு தெரியும்

அது சரி
பௌர்ணமி எப்படி இருக்கும்

ம்.. பௌர்ணமி??
அது .,
உன்னை போல இருக்கும்

பொய் தானே
நிஜம் தான் அன்பே!

இல்லையென்றால்
உன்னைப் போல் - ஒருத்தியை
பார்த்த பின்பும்
சீறாமல், சீண்டாமல் இருக்குமா
இந்த சிற்றலை ..

சுனாமி என்கிறார்களே
அது ?
ஒ அதுவா
அதுவும்

நம்மை போல தான்
"கண்மூடி பிறந்த - பிறவிப் பிழை"

- மன்சூர்

வாழு; வாழ விடு .

நடை பாதையில்
நானொரு
கையேந்தி விளக்கு

விடியலை காணாத
விழிகள் என்னுடையது

தவிர
நானொன்றும் குருடனும் அல்ல
கையேந்துவது பிச்சைக்கும் அல்ல

என் கரம் பற்றி
வாழ்கையின்
சாலையை கடக்க
கரம் கொடுக்க வேண்டாம்

நான்
கடந்து போகும் நேரத்தில்
நடந்து போகும் பாதையில்
வழி விட்டாலே போதும்

- மன்சூர்

தோழி துணைவியானால்!

அதிகாலை சோம்பல்
சுகமாகும்..

அன்பாலே வீடு
அழகாகும்..

சிற்றுண்டி வேளை
இனிதாகும்..

சின்ன சின்ன ஊடல்
கனிவாகும்..

முகம் பார்க்கும் கண்ணாடி
கல்வெட்டு ஆகும்..

பிரிந்து சேருகையில்
TV remote பகையாகும்..

சமயலறையில்
பாத்திரங்கள் வாய் பேசும்..

படுக்கையறையில்
தலையணைகள் வாய் பேசும்..

தொலைபேசியும், நண்பர்களும்
பகையாகும்..

இரவில் மின்வெட்டு
வரம் அகும்..

ப்ரியமான தோழி
துணைவி ஆகும் போது..

- மன்சூர்

இது தான் வாழக்கை

நேசமில்லா பூவையின்
கூந்தலில்
குடியேறிப் போன

அந்த
வசமுள்ள ரோசா

முள் கொண்ட நேசம்
தெரியாமலேயே
தெருவில் வீழ்கிறது

- மன்சூர்

அம்பு வார்த்தை

கத்திரி வெயில்
கத்தி பார்வை

இஸ்திரி இதழ்கள்
திரி - புருவங்கள்
யாவையும் விட

என் - அன்பு நெஞ்சை.
தைத்ததடி
உன் - அம்பு வார்த்தை

- மன்சூர் 

வாழ்கை - கணக்கு

நட்பை
கூட்டவும்

கூடா - நட்பை
கழிக்கவும்

அறிவை
பெருக்கவும்

வாழ்கையை
வகுக்கவும்

பழக்கிய பள்ளிக்கூடம்

- மன்சூர் 

ஓட்டாண்டி

ஓட்டு கேட்க வரும்
நேரத்திலாவது
சாலைகள் சீரமைக்கப்படும்
என எதிர் நோக்கும்
என் மக்களுக்கு

எப்போது விளங்கும்

அவர்கள்,

ஓடு தளம்

அமைக்கிறார்கள்

நம்மை

ஓட்டாண்டி ஆக்குகிறார்கள் என்று

- மன்சூர் 

இளமையும் /வறுமையும்


வறுமையும்
முரண்பாடும்,

கிழிசலை பூட்டி
கால் வயிற்றுக்காக
கையேந்துகிறது
சாலையோர
சிக்னல்களில்..

கிழிசலை கூட்டி
கால் வயிற்றுக்காக(!)
கூத்தாடுகிறது
வெள்ளி திரை
மேடைகளில்..

- மன்சூர் 

Candy Crush



Babe..

Candy bar பார்வையில் - மனதை

Candle போல் உருக வைத்தாய்

Caramel புன்னகையில் - என்

பாவங்கள் போக்கி வைத்தாய்

- மன்சூர் 

நண்பி

நண்பி இல்லாத உலகம்
எப்படி இருக்கும்!

அதிகாலை சூரியன்
சோம்பல் முறிக்கும் ;

அலுவலக வேலைகள்
அலுத்து போகும் ;

cell phone இரைச்சல் இல்லாமல்
இதயம் கனக்கும் ;

நேசம் கலந்த இதயத்தில்
நிகோடின் பரவும் ;

மதுபான கடைகளும் , மயானமும்
மலர்ச்சியாகும் ;

பூ பூக்கும் சாலைகள்
வறட்சியாகும் ;

பூமியெல்லாம் அன்பு மலர
வீதியெல்லாம் நேசம் செய்வோம் ..

- மன்சூர் 

ஒற்றை பனை மரம்



ஒற்றை பனை மரம் 
ஓலை குடிசை 
ஒரு வேளை உணவு 
உன் மடியில் கனவு 
அமைந்தாலே போதும் - என் 
ஆசைகள் தீரும்

இரட்டை பிள்ளைகள் 
இடைவிடா தொல்லைகள் 
கண்டிக்க நீ 
கனிவு காட்ட நான் 
வாழ்ந்தாலே போதும் 
வசந்தங்கள் மலரும்..


- மன்சூர்

பெண் மனசு

பிரியமான
பெண்ணின் கை பிடிக்க

முதலில்

அவளின்
மனம் படிக்க வேண்டும்

காத்திருத்தல் மட்டுமல்ல ,

விழித்தலும்
வலித்தலும் - அதை
பொறுத்தலும்
தான் காதல்

- மன்சூர்

நட்பு

எல்லா சீசனிலும்
பூப்பது
நட்பு ஒன்று தான்..

எந்த புயலையும்
கடப்பது
friend-ship ஒன்று தான்..

எந்த நேரத்திலும்
நிலைப்பது
தோழமை ஒன்று தான்..

- நான் -
மீள்வதும்
வாழ்வதும்
நட்புக்காக தான் ..

- மன்சூர் 

வாழ்க்கை

பெண்ணே!

என்னை விட யாரும்
உன்னை அன்பு செய்து வெல்ல இயலாது

உன்னை விட யாரும்
என் அன்பை வென்று செல்ல இயலாது

உன்னை புரிதலுக்கே
பாதி வாழ்க்கை
பணயம் என்றால் - நம்
பயணம் தான் எப்போது?

வெறும் புரிதலில் இல்லையடி வாழ்க்கை
பிரியாது இருத்தலும்
பிரியமாய் இருத்தலும் தான் வாழ்க்கை



- மன்சூர் 

மனம் வீசுவோம்

மலர்வதும்
மண்ணில் வீழ்வதும்
ஒரு முறை தான்

மனம் வீசுவோம்
மனிதர்களே

மலர்களாக..

- மன்சூர் 

காதல் காளான்கள்..

காத்திருந்த போதெல்லாம்
கண்டு கொள்ளாத
காதல் பிசாசு

காலம் தாழ்ந்து வந்த
ஒற்றை நொடிக்காக
காலம் கடத்தி போகிறது

காலனின் காலடியில்
காலமாகி போகிறது
என் காதல் காளான்கள்..

- மன்சூர் 

Jessieக்காக..



அன்று - நீ
விழியில்
விழுந்ததற்கு

இன்று - நான்
வலியில் துடிக்கிறேன்

வண்டுண்ணும்
பெண் பூக்களுக்கு,
என்றும்
காதல் செரிப்பதில்லை

(- Jessieக்காக)

- மன்சூர் 

விந்தை

சில சமயங்களில்
Sofa cum Bed போல
நீண்டு போகிறது - என்
நினைவுகள்

சில சமயங்களில்
Window screen போல
விலகி போகிறது
காற்றில்..

சில சமயங்களில்
Wall clock நொடிமுள் போல
கடினமாகிறது - என்
பொழுதுகள்

சில சமயங்களில்
Foot mat போல
புழுதியாகிறது
வாசலில்..

முற்றத்தில்
காத்திருக்கிறேன் -
உன் மு*****காக
பெண்ணே..

- மன்சூர்

வரம் வேண்டும்

வரம் வேண்டும்
நீ எனக்கு மனைவியாய்
இறுதிவரை தோழியாய் வரும்
வரம் வேண்டும்

தினமும் நீ
தூங்கும்அழககை
ரசிக்கும் வரம் வேண்டும் ..

தினமும் மலர் சூடி
உன் நெற்றியில்
முத்தமிடும் வரம் வேண்டும்

அனைவரும் இருக்கும் நேரத்தில்
கள்வனாய் -உன்
இடை கிள்ளும் வரம் வேண்டும் ..
யாரும் இல்லா நேரத்தில்
முத்தத்தில் உன்னை
மூழ்கடிக்கும் வரம் வேண்டும்

குழந்தையாய் நீ
செய்யும் தவறுகளை
ரசிக்கும் வரம் வேண்டும்

யாரும் இல்லா சாலையில்
உன் கைபிடித்து
நடக்கும் வரம் வேண்டும்

மழை நேரத்தில்
ஒரு குடைக்குள் - இருவரும்
செல்லும் வரம் வேண்டும்

மழையில் நனைந்த என் தலையை
புடவை நுனிகொண்டு - நீ
துடைக்கும் வரம் வேண்டும்

என் உயிர் சுமக்கும் - உன்னை
என் கண்ணுக்குள் வைத்து
பார்க்கும் வரம் வேண்டும்

என் உயிர் பிறந்தபின்நாளில்
முதலில் - உன் முகம்
பார்க்கும் வரம் வேண்டும்

தள்ளாடும் வயதிலும்
நீ - என் தோள்
சாயும் வரம் வேண்டும்

நான் மரணித்தாலும்
நீ - தனிமை துயர்
கொள்ளாத வரம் வேண்டும்

ஆதலால்.,

புன்னகை பூத்து
தோள் சாய்ந்து
இருவரும் - ஒன்றாய்
மரணிக்கும் வரம் வேண்டும்

- மன்சூர்

கரு கருவிழிகள்



சிவப்பு ,பச்சை ,நீல வண்ணங்கள்
இருந்தாலும் ..

உன் கருப்பு மையிட்ட
கண்கள் பற்றி - பேச
பற்றவில்லையடி

மற்ற வண்ணங்கள் ..

- மன்சூர்

She




She is a Dreamer and
changing my darkness..

She is a Doer and
molding my faults..

She talks like spring and
inspiring me..

She walks like rain and
left beauty every-time..

She looks like winter and
frozen me by her beauty..

She acts like summer and
pleasing me with her smile..

She is so angelic and
I never get tired of looking at her..

- Mansoor

இப்படிக்கு காதல்..

"Ennai
அறிந்தவர்கள் 
மண்ணாள்கிறார்கள் 

அறியாதவர்கள் 
இப்படிக்கு 

மண்ணாகிறார்கள்

- இப்படிக்கு காதல்.. "


 - மன்சூர்