Thursday, 2 April 2015

செம்பூவே



தீ பற்றாத
பூக்காடோ
உன் கண்கள்

தேய் பிறை இல்லாத
வானமோ
உன் நெற்றி

கந்தகமாகி போன
காந்தங்கள் தானோ
உன் கண்கள்

தொங்கல் தோட்டத்தின்
அனிச்சம் பூவோ
உன் செவிகள்

வண்டுன்னும்
செம்பூவோ
உன் இதழ்கள்

நேசத்திற்காக துடிக்கும்
நெஞ்சமோ - உன்
நல் இதயம்..

- மன்சூர்

No comments:

Post a Comment