Thursday, 2 April 2015

கண்மூடி பிறந்த பிழை

கண்ணாளனே ,
உறங்க இடம் வேண்டும்

கண்மணியே,
என் மடியிலா ? கடற்கரையிலா ?

ம் ஹூம், ஆசை தான்
கடற்கரை போதும் எனக்கு

சரி சரி,
அலை வந்து, அள்ளி கொள்ள போகிறது
இன்று வேறு
பௌர்ணமி என்கிறார்கள்

ஏன்? அது
ஆண் அலையா?

அது ஆண் அலையோ? - இல்லை
காதல் வலையோ?
யாருக்கு தெரியும்

அது சரி
பௌர்ணமி எப்படி இருக்கும்

ம்.. பௌர்ணமி??
அது .,
உன்னை போல இருக்கும்

பொய் தானே
நிஜம் தான் அன்பே!

இல்லையென்றால்
உன்னைப் போல் - ஒருத்தியை
பார்த்த பின்பும்
சீறாமல், சீண்டாமல் இருக்குமா
இந்த சிற்றலை ..

சுனாமி என்கிறார்களே
அது ?
ஒ அதுவா
அதுவும்

நம்மை போல தான்
"கண்மூடி பிறந்த - பிறவிப் பிழை"

- மன்சூர்

No comments:

Post a Comment