Thursday, 2 April 2015

வாழு; வாழ விடு .

நடை பாதையில்
நானொரு
கையேந்தி விளக்கு

விடியலை காணாத
விழிகள் என்னுடையது

தவிர
நானொன்றும் குருடனும் அல்ல
கையேந்துவது பிச்சைக்கும் அல்ல

என் கரம் பற்றி
வாழ்கையின்
சாலையை கடக்க
கரம் கொடுக்க வேண்டாம்

நான்
கடந்து போகும் நேரத்தில்
நடந்து போகும் பாதையில்
வழி விட்டாலே போதும்

- மன்சூர்

2 comments: