Friday, 3 February 2017

முதல் பிள்ளை

பிள்ளை குறும்பு
பல செய்தாலும்

தொல்லை
தொள்ளாயிரம் தந்தாலும்

செல்லக் குழந்தை நீ
-உன்னை
நெஞ்சில் சுமந்து
நேசம் ஊட்டி, உயிர் வளர்ப்பேன்

பிள்ளைகள் ஒன்பது
பிறந்தாலும்
- நீ தான் எனக்கு
முதல் பிள்ளை

என் கருவை சுமக்கும்
உயிரே
நீயும் எனக்கு
கருவே!

- மன்சூர் 

வா! தோழா வா!

வா தோழா வா

விவசாயம் பழக வேண்டும் - நாட்டு
விவகாரம் புரிய வேண்டும்

காவேரி இணைக்க வேண்டும்
காறாம் பசு அறிய வேண்டும்

இனம் கண்டு சேர வேண்டும்
ஈழம் கரை சேர்க்க வேண்டும்

வா தோழா வா

ஆல்கஹால்கள் அழிய வேண்டும் - நாட்டில்
அமைதி நிலவ வேண்டும்

பேதங்கள் நீங்க வேண்டும்
பேய் சாதிகள் ஒழிய வேண்டும்

பெண் கொடுமை ஓய வேண்டும்
பெரியார் கொள்கை உயர வேண்டும்

faceBook WhatsApp இல்
வசை பாடியது போதும் போதும்

வீதியில் வந்திறங்கி - புதிய
விதி படைப்போம்

வா தோழா வா!


- மன்சூர்

இன்னுமொரு கவிஞன் வேண்டாம்

இன்னுமொரு
கவிஞன் வேண்டாம் பெண்னே

இமை மையினை
திருத்தி கொள்

இதழ் சுளிவுகளை
நிறுத்தி கொள்

இடை அசைவினை
குறைத்து கொள்

இன்னுமொரு
கவிஞன் வேண்டாம் பெண்னே

கண்ண தாசன் முதல்
கமல் ஹாசன் வரை
காதல் தாசன்கள்
குறையவில்லை

- மன்சூர் 

மோட்சம்

வண்ணத்து பூச்சிகளை
வதைக்காதே பெண்ணே!

வண்ணம் பூசிக்கொண்டு - அவை
உன்னை மொய்க்கிறது
உண்மை பொய்க்கிறது

மோட்சம்
-அடைகிறது
முட்ட முட்ட
-தேன் குடித்து 

- மன்சூர்

பழகி கொல்லாதே!!!

மூன்றாம் உலகப்போருக்காக
முன்னவர் விட்டு சென்ற
-கன்னி வெடியே,

வெடித்து தொலைத்து விடாதே
அப்பள நெஞ்சை
உடைத்து நொறுக்கி விடாதே

-விலகி கொள்ளடி
-பழகி கொல்லாதே

- மன்சூர் 

மூன்றாம் உலகப்போர்

"மூன்றாம் உலகப்போர்
மூண்டாலும் மூளும்

முட்ட முட்ட முழிக்கும் - உன்
முட்டை கண்களுக்காக "

- மன்சூர் 

மையல்

பூக்களுக்கு மத்தியில்
புன்னகை வீசும் புயலே,

வாசம் கொண்ட பூக்கள் மீது
நேசம் கொள்ள வந்தாயோ!

நேசம் கொண்டு
நேசம் கொண்டு
நெஞ்சை கிள்ள வந்தாயோ!

வண்ணம் கொண்ட பூக்களையெல்லாம்
கன்னம் வைக்க வந்தாயோ!

மையல் கொள்ளும் பேரழகே
எந்த புயலின் சின்னம் நீ!?

இதய கரையில் மையம் கொண்டு
என்னை கொல்ல வந்தாயோ??

- மன்சூர்


பாவம் இந்தப் பூக்கள்

பாவம் இந்தப் பூக்கள்

உன்
-கூந்தல் காட்டில்
-குடியேற வேண்டி மலர்கிறது

நான்
-தொலைந்து போனது
-தெரியாமல்

- மன்சூர்  

ஏன்?

நாணம் கொண்ட நாணலே
நளினம் கூடி போனதேன்?

தலை கவிழ்ந்த தாமரையே
இதழ்கள் விரித்தும் தயக்கம் ஏன்?

தோகை விரித்த மயிலே
மேகம் சூழ்ந்தும் நிசப்தம் ஏன்?

அழகு பூக்கும் அல்லி பூவே
அரும்ப மறுக்கும் காரணம் என்ன

சிறகு முளைத்த செங்குயிலே
சிறகடிக்க மறந்தது ஏன்?

உலக பூக்களின் அணிவகுப்பே
புன்முறுவலின் ரகசியம் என்ன?

- மன்சூர் 

அமுதம்

அம்மா

காக்கைகள் எல்லாம்
கரைந்து கரைந்து

கக்கை ஆயின - காய்ந்த
சக்கை ஆயின

உன் - கைகளால்
அமுதம் உண்ணாமல்

- மன்சூர் 

விருந்து

வாழை இலை பரப்பி
வகை வகையாய்
உணவு சமைத்து

வக்கணையாய் சுவைத்திட
விருந்து -
பரிமாறும் உன் கைகள்

வயிறார உட்கொண்டு
மனதார பாராட்டும்
பசி கொண்ட என் நெஞ்சில்

குடி கொண்ட உன் சமையல்
ருசி கொண்ட நாவுக்கு - நீ
சமைத்தது பாயசம் என்றாலும்

பந்தியில் -
பரிமாறியது எல்லாமே
பாசம் தான் அம்மா!

- மன்சூர்

தாய்மை

பெண்ணே,

தாயுமானவனனும்
மாணவன் ஆகலாம்
உன்னிடம்.,

தாய்மை பயில

- மன்சூர்

சிக்கல்

கலைந்து போன - உன்
செங் கூந்தலில்
சிக்கி கொள்கிறதடி - என்
சின்னஞ் சிறு-மனசு!

- மன்சூர்

"போதும் கவிஞரே"

உன்
-கார்மேக கூந்தல் சூழ்ந்து

என்
-கவிதை மழை பெய்யும் போதெல்லாம்

உன்
-முந்தானை குடைபிடித்து

உன்
-புன்னகை மின்னல் ரசிக்க வேண்டும்

உன்
-கருவிழியின் மை கொண்டு
நான்
-காகிதத்தில் கிறுக்கும் போது

என்
-காதுமடலை காதலோடு
நீ
-கடிக்க வேண்டும்

உன்
-செவ்விதழின் சாயம் கொண்டு
நான்
-செவ்வாய் ரசம் வைக்க

நீ
-"போதும் கவிஞரே" என்று சொல்ல
நான்
- செல்லமாய் கோபம் கொள்ள வேண்டும்.

- மன்சூர்


உடன் பிறப்பு

எளிமையும் - அழகும்
அவளின்
உடன் பிறப்புகள்

சிகை முடிந்து
பூச்சூடி புரிய வேண்டியதில்லை
அவளின் அழகு

அதிகாலை சோம்பலில் கூட
அவள் அழகு தான்

- மன்சூர்


மண்~மனம்!

உன் மண்~மனம் மாறாத
சமையல் மணத்தில்
தாய் மனம் வீசுதடி
தாயுமானவளே!

இது தான்
மன்மத மனம் வீசும்
காதல் மனதின்
சமையல் மந்திரமோ?

- மன்சூர் 

இதய வீணை

இதய வீணைக்கு
இது
- வீணான ஆசை தான்.

- உன் இசை விரல்கள் தீண்டி
சங்கீத நாணேற்ற வேண்டுமென்று
சாரீரம் பாடுகிறது ..

- மன்சூர்




கலாச்சாரமும் ~ கற்பும்

இலைகளும் கொடிகளும்
மிருக தோள்களும்
நூல் இலைகளும்
போர்த்தி போற்றும்
கலாச்சாரமும்
கற்பும்

ஆடைகளை கொண்டே
அமைகிறது என்றால்

ஏவாளின்
ஆப்பிளே
ஆடையாகி இருக்கலாம்.

- மன்சூர்


பட்டாம் பூச்சி

படபடக்கும்
பட்டாம் பூச்சியாகிறது
இதயம்

மொட்டு விட்ட
முல்லையே

இன்று -உன்
பிறந்த நாள்
என்பதாலா?

- மன்சூர் 

உன் பிறந்த நாள்!

மத்தாப்பு புன்னகையில்
புத்தாடை பளபளக்கும்
பொன்னாள் -உன்
பிறந்த நாள்!

மகிழ்ச்சி பொங்கலில்
சர்க்கரை நினைவுகளிட்டு
கரும்பின் தித்திப்போடு
ஆடிப் பெருக்கை போல்
பெருகி வர வேண்டும் -நீ
நலங்கள் பெற வேண்டும்

வளமையும்
வலிமையும்
உன்னோடு
வாழ்வாங்கு வாழட்டும்

- மன்சூர் 

இதய வானம்

முந்நூறு திங்கள் 
முன்னே பிறந்த 
முழு நிலவே! 

காதல் மேகங்கள் கடந்து 

எப்போது உதித்தாய் 
என் இதய வானில்.. 

- மன்சூர் 


வெண்பா

பூவையே

நீ
பூமிக்கு வந்து சேர்ந்த நாள் முதல்

மொட்டாகி
பூவாகி
உன் கூந்தல் காட்டில்
குடியேற
பூத்துக் குலுங்கும்
பூங்~காட்டை

இப்படி
பூ~நெஞ்சோடு அணைத்து
பாசம் காட்டும்
உன் பெருங் கருணையை
பேரன்பை

புகழ் பாட
வெண்பா இல்லாமல்
வாயடைத்து போகின்றேன்!

- மன்சூர் 

தோள் சேரடி தோழி..

தோள் கொடு
தோள் சாய்
துணைவி ஆகு - என்
தோழியான பெண்ணே!

- மன்சூர் 

friendSHIP

தோழியாக
அறிமுகம் ஆனாய்

புது நட்பில்
நம்பிக்கை கொண்டாய்

அன்பால்
ஏறுமுகம் கண்டோம்

சில பொழுதுகளில்

பிரிவால்
இறங்கு முகம் கண்டோம்

இன்று
நெஞ்சில் நீங்கா
துறைமுகம் ஆகி
நங்கூரமிட்டாய்
நட்பே ..

(Dedicated to all firends!)

- மன்சூர் 

விடியல்

இனி வரும்
இளவல் பொழுதுகள் எல்லாம்
உன் விழி~முகம் பார்த்து
விடிய வேண்டும்
உயிரே ..

- மன்சூர் 

தாயுமானவள்

கைவிரல் கோர்த்தாய்
கவலைகள் தீர்த்தாய்
துணையாக வந்தாய்
துயரங்கள் தீர்த்தாய்..

பார்வையில் கண்டித்தாய்
கோபத்தில் தண்டித்தாய்
புன்னகையில் மன்னித்தாய்
என் தாயுமான தாயே!

- மன்சூர்

முகவரி நீ ..

என் முகவரி நீ
முகவரியின் முதல் வரி நீ

உன்னை
கண்ட இடத்தில தான்
நான் தொலைந்து போனேன்

உன்னை
கண்ட பிறகு தான்
வாழ்வின் அர்த்தம் கண்டேன்

- மன்சூர் 

மழலை பெண்ணே..

முன் செய்த பாவங்கள் யாவும்
உன்
புன்~சிரிப்பில் தொலைவதினாலே
நானும்
புனிதன் ஆகிறேன்
மழலை பெண்ணே..

- மன்சூர் 

திருநாள்

நான்
தேடித் திரிந்த தேவதை
நீ தான்
நீயே தான்

நான்
இதுநாள் வரை
சேர்த்து வைத்த
நேசமெல்லாம்
உனக்கு தான்
உனக்கே தான்

உனக்கான என் நேசம்
உன்னோடு துவங்கும்
திருநாள் தான்
எனக்கான பிறந்தநாள்!

- மன்சூர்

ஒரு நாள் வாழ்க்கை..

ஒரு நாள் மட்டுமே
வாழ்க்கை என்றால்

உன் விழி வெளிச்சத்தில்
நான் உயிர் வாழ வேண்டும்
ஈசல் போல

- மன்சூர்


மீன்~கண்கள்

உன்னை
தேடிவந்த நான்
தொலைந்து போனதும்;

தொலைந்து போன என்னை
மீட்டெடுத்ததும்;

மீள முடியாத உன்
மீன் - கண்களில் தான்!

என்னை
கொன்று திண்பதும்,
தின்று கொல்வதும் - உன்
கண்களின் களவுத்தனமா?

பார்வையால்
வீழ வைப்பதும்,
வாழ வைப்பதும் - உன்
கண்களின் கள்ளத்தனமா?

இமைத்து, இமைத்து
இம்சிக்கிறாய்
என் இளமையை ஏனடி
வஞ்சிக்கிறாய் கண்ணே!

- மன்சூர் 

முன்பே வா

இத்தனை நாளாய்,
இளமை முழுவதும்;
நான் - சேர்த்து வைத்த;
மொத்த அன்பையும்;
முத்தமாய் முதலீடு செய்ய;
முன்பே வா - என்
அன்பே வா!

- மன்சூர் 

கனவு இல்லம்

பெண்ணே
நான் விரும்புவதெல்லாம்
எனக்கான "பெண் புலமாய்" நீயும்
உனக்கான "பின் புலமாய்" நானும்
நமக்கான ஒரு வாழ்வு

அதில்

நமக்கே நமக்கான கனவுகள்
நேசத்தில் - உறவு விதைத்து
நேசத்தில் - உரிமை வளர்த்து
நேசத்தில் சுவர் எழுப்பி
நேசத்தால் நிறைய வேண்டும் - நம் வீடு

நீ என் கனவாக
நான் உன் கண்களாக
அமைய வேண்டும்
- நம் கனவு இல்லம்
அதையே விரும்புகிறது
- என் அன்பு உள்ளம்


வரம்

ஒரே பிறவியில்
இரண்டு வரம்

தோழியாக
துணைவியாக
நீ..

- மன்சூர் 

சுவாசம்

தேவதைகளை
நம்பியது இல்லை
நீ வரும் வரை.

வேதனைகள்
வந்தது இல்லை
நீ இருக்கும் வரை.

தனிமைகளில்
வாழ்ந்திருக்கேன்
நீ வரும் வரை.

இன்று .,

தனிமை வலி
தெரியவில்லை
நீ இருக்கும் வரை.

தன்னை நேசிக்க கற்று தந்தாய்
உன்னை நேசிக்கும்
என் இதயம் -அது
வேறு எதையும்
யோசிக்க பழகவில்லை
உன்னை யாசிக்கும் என்னுயிர்க்கு
உன்னையே சுவாசிக்க
பழகி கொன்டேன்.

- மன்சூர்