Friday, 15 April 2016

கலைந்து போன கனவு

எல்லா சீசன்களிலும்
பூத்து கிடந்தாய்
இளவேனிற் காலமாக..

எல்லா புயல்களிலும்
சேர்ந்தே இருந்தாய்
வானிலையாக..

எல்லா பந்தயத்திலும்
ஒன்றாக பயணித்தாய்
வெற்றியாக..

செல்லக் கோபத்தில்
சின்னச் சின்ன ஊடல்களில் மலர்ந்தாய்
புன்னகையாக..

நடுநிசி வரை விழித்திருந்து
பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னாய்
பிரியமாக..

இடறி விழும் போதெல்லாம்
ஆறுதல் தந்தாய்
அன்பாக..

ஈருடலில் ஓருயிராய்
இணைந்திருந்தாய்
உறவாக..

இன்று
கலைந்து போனாயடி
வெறும் கனவாக..

- மன்சூர்


No comments:

Post a Comment