ஒத்த பனை மரம்
நிழல் தராதுன்னு போனாயோ
ஓலை குடிசை
ஒழுகுமுன்னு போனாயோ
ஒரு வேளை உணவு
போதாதுன்னு போனாயோ
வெத்து கனவு மட்டும்
பலிக்காதுன்னு போனாயோ
காடு கழனியெல்லாம்
காஞ்சதுன்னு போனாயோ
என்ன குத்தம் செஞ்சேன்னு
என்னை விட்டு போனாயோ
சாதம் வடிக்கத் தெரியாதே
பசி கூட தாங்க மட்டேன்னே
தனியே படுத்துறங்க
திராணி இல்லையே
உன்னை பார்க்காம
உறக்கமும் வராதே
மாமன் மனசறிஞ்சு
மணக்கும் மரிகொழுந்தே
என்ன குத்தம் செஞ்சேன்னு
என்னை விட்டு போனாயோ
ஊர் கதைப் பேசி
வம்பு வளர்த்தேனா
கள்ளு குடிச்சேனா
களவு செஞ்சேனா
கள்ளத்தனமாக உன்
தங்கச்சிய பார்தேனா
வெட்டியா கடன் வாங்கி
ஊரெல்லாம் திரிஞ்சேனா
என்ன குத்தம் செஞ்சேன்னு
என்னை விட்டு போனாயோ
இரட்டைப் புள்ளை தானே கேட்டேன்
என்- செல்ல சிறுக்கியே
இரட்டைப் புள்ளை தானே கேட்டேன்
ஒத்தப் புள்ள என்னை
ஒத்தையில தவிக்க விட்டு
போனதென்ன - ரோசாவே
மனச மாத்திக்கிட்டு
மல்லிப் பூ வாங்கிகிட்டு
அந்தி சாயும் முன்னே
சீக்கிரமா வா புள்ள
- மன்சூர்
நிழல் தராதுன்னு போனாயோ
ஓலை குடிசை
ஒழுகுமுன்னு போனாயோ
ஒரு வேளை உணவு
போதாதுன்னு போனாயோ
வெத்து கனவு மட்டும்
பலிக்காதுன்னு போனாயோ
காடு கழனியெல்லாம்
காஞ்சதுன்னு போனாயோ
என்ன குத்தம் செஞ்சேன்னு
என்னை விட்டு போனாயோ
சாதம் வடிக்கத் தெரியாதே
பசி கூட தாங்க மட்டேன்னே
தனியே படுத்துறங்க
திராணி இல்லையே
உன்னை பார்க்காம
உறக்கமும் வராதே
மாமன் மனசறிஞ்சு
மணக்கும் மரிகொழுந்தே
என்ன குத்தம் செஞ்சேன்னு
என்னை விட்டு போனாயோ
ஊர் கதைப் பேசி
வம்பு வளர்த்தேனா
கள்ளு குடிச்சேனா
களவு செஞ்சேனா
கள்ளத்தனமாக உன்
தங்கச்சிய பார்தேனா
வெட்டியா கடன் வாங்கி
ஊரெல்லாம் திரிஞ்சேனா
என்ன குத்தம் செஞ்சேன்னு
என்னை விட்டு போனாயோ
இரட்டைப் புள்ளை தானே கேட்டேன்
என்- செல்ல சிறுக்கியே
இரட்டைப் புள்ளை தானே கேட்டேன்
ஒத்தப் புள்ள என்னை
ஒத்தையில தவிக்க விட்டு
போனதென்ன - ரோசாவே
மனச மாத்திக்கிட்டு
மல்லிப் பூ வாங்கிகிட்டு
அந்தி சாயும் முன்னே
சீக்கிரமா வா புள்ள
- மன்சூர்
No comments:
Post a Comment