Friday, 15 April 2016

சீக்கிரமா வா புள்ள

ஒத்த பனை மரம்
நிழல் தராதுன்னு  போனாயோ

ஓலை குடிசை
ஒழுகுமுன்னு போனாயோ

ஒரு வேளை உணவு
போதாதுன்னு போனாயோ

வெத்து கனவு மட்டும்
பலிக்காதுன்னு  போனாயோ

காடு கழனியெல்லாம்
காஞ்சதுன்னு போனாயோ

என்ன குத்தம் செஞ்சேன்னு
என்னை விட்டு போனாயோ

சாதம் வடிக்கத் தெரியாதே
பசி கூட தாங்க மட்டேன்னே

தனியே படுத்துறங்க
திராணி இல்லையே

உன்னை பார்க்காம
உறக்கமும் வராதே

மாமன் மனசறிஞ்சு
மணக்கும் மரிகொழுந்தே

என்ன குத்தம் செஞ்சேன்னு
என்னை விட்டு போனாயோ

ஊர் கதைப் பேசி
வம்பு வளர்த்தேனா

கள்ளு குடிச்சேனா
களவு செஞ்சேனா

கள்ளத்தனமாக உன்
தங்கச்சிய பார்தேனா

வெட்டியா கடன் வாங்கி
ஊரெல்லாம் திரிஞ்சேனா

என்ன குத்தம் செஞ்சேன்னு
என்னை விட்டு போனாயோ

இரட்டைப் புள்ளை தானே கேட்டேன்

என்- செல்ல சிறுக்கியே
இரட்டைப் புள்ளை தானே கேட்டேன்

ஒத்தப் புள்ள என்னை
ஒத்தையில தவிக்க விட்டு
போனதென்ன - ரோசாவே

மனச மாத்திக்கிட்டு
மல்லிப்  பூ  வாங்கிகிட்டு
அந்தி சாயும் முன்னே
சீக்கிரமா வா புள்ள


- மன்சூர் 

No comments:

Post a Comment