Friday, 15 April 2016

விடியாத இரவு..

சிற்றுண்டி வேளை கசக்குதடி
வெறும் உலையாக
வயிறு கொதிக்குதடி

அடுப்படியில் பூனை உறங்குதடி
சமையலறை பானைகள்
உருளுதடி

முகம் பார்த்த கண்ணாடி அழுகுதடி
விரிசல் விழுந்து
உடையுதடி

வீதியோரம் போனால் நோகுதடி
புழுதியில் விழுந்து - கண்கள்
அழுகுதடி

தொலைபேசியும், நட்பும் தொலைந்து போக
என் நிழலே எனக்கு
மறந்ததடி

கண்ணீரில் தலையணை நனையுதடி
பஞ்சு மெத்தை சுருண்டு
கிடக்குதடி

பகல் கூட இருளாக போனதடி
மின் வெட்டே வாழ்க்கையாக
மாறுதடி

இரவெல்லாம் கனவாக போனதடி
என் வானம் அஸ்தமனம்
ஆனதடி


- மன்சூர்

No comments:

Post a Comment