Tuesday, 26 April 2016

சூதானம்

சூதானமாக இருடி - என்
சிறுக்கி,

சுள்ளி பொறுக்க போற இடத்துல
சுள்ளான் பயலுக திரிவாங்கே

மனசை கலைக்க தான்
மாடு மேச்சி வருவாங்கே

களவானி பயலுக
கண்ணால வலை விரிப்பாங்கே

சோலிய பாரு புள்ள

அசந்தா
ஆட்டைய போட்டுடுவாங்கே

உசுருக்கு உலை வச்சிருவாங்கே
உசுப்பி விட்டு போயிருவாங்கே

பொட்டச்சி இடம் கொடுத்த
பட்டரைய போட்டுருவாங்கே

மானம் தான் உசுரு புள்ள - அதை
மனசுக்குள்ள பதிஞ்சிக்க

மத்ததெல்லாம் கொசுறு புள்ள
மருவாதையா புரிஞ்சுக்க

ஒழுக்கமா நீ இருந்தா
கண்ணகி -னு சொல்லுவாங்கே

ஒழுக்கங் கெட்டு போனாக்க
ஊர் பழியை போடுவாங்கே

கருக்கலுக்கு முன்னே
வீடு சேர்ந்து விடு

சூதானமாக இருடி - என்
செல்ல சிறுக்கியே..

- மன்சூர்





No comments:

Post a Comment