Thursday, 21 April 2016

ஏழையின் கோவணம்

மறியல்கள்
போராட்டங்கள்
பேச்சுவார்த்தைகள்
கடிதங்கள்

எதற்கும் மசியவில்லை
ஒரு சொட்டு கூட கசியவில்லை
கர்நாடகத்து
காவிரி..

"திறவாய் அணையே"  என்று
வாய் பிளந்து நின்று
விளை நிலம் பாலையாயனது
விவசாயம் பாழானது

தண்ணீ ர் அரசியலானது
நீதி வாயைப் பொத்திக்கொண்டது
அரசு கண்ணைக் கட்டிக்கொண்டது
அறுவடை செய்தவனின் கோவணத்தில்

 - மன்சூர்

No comments:

Post a Comment