Friday, 22 April 2016

கேள்வி கேட்காதே..

நாம்
காற்றலையில் காசு பார்ப்போம்
ஊழல் என்று புலம்பாதே

மதுக்கடைகள் அடைக்காமல்
மனைவியர் தாலி அறுப்போம்
மனு நீதி கேட்டு திரியாதே

காவிரியோ
கட்சத்தீவோ - எதையும்
கேட்டு தொலைக்காதே

நாம் - வழங்கிய
வண்ண தொலைக்காட்சியில்
அழுகாச்சி தொடர்கள் பார்த்தாயா

உண்டு களித்தாயா
IPL கண்டு திளைத்தாயா
எனில் மது அருந்தி மட்டையாகு

போதை தெளிந்தால்
புகையிலைக்கு ஆதரவு கொடு
புத்தி மட்டும் தெளியாதே

பிள்ளைகள் படிக்க
தனியார் பள்ளிக்கு போ - ஆனால்
அரசாங்க வேலை மட்டும் கேட்காதே

மில்லியனில் கடன் கேளு
பெயர் மட்டும்
மல்லையாவாக இருக்கட்டும்

ஓட்டு போடு - அல்லது
தேர்தலை புறக்கணி - ஆனால்
கேள்வி மட்டும் கேட்காதே

- மன்சூர்




No comments:

Post a Comment