Friday, 21 February 2014

குஸ்கா

கைகலப்புக்கும்
கலகலப்புக்கும்
இடையிலான - என்
காதல்
திருமணத்தில்

குஸ்கா மட்டுமே
இருக்கிறது
என அறியாமல்
குஷியாக அமர்ந்து
பிரியாணிக்கும், pieceகும்
plan பண்ணும்
பிரியமான நண்பர்களிடம்

யார் சொல்வதோ ?
யார் சொல்வதோ?

- மன்சூர் 

தாய் மடியே

தாய் மடி போல்
இல்லை
தலையணை உறக்கம்..

அரவணைப்பை போல்
இல்லை
போர்வையின் இறுக்கம்..

கைவிரல்கள் போல்
இல்லை
மயிலிறகின் வருடல்..

தலை துவட்டி விட
காதல் மனைவி இருந்தாலும்
அம்மாவின்
சேலை தலைப்பை போல் வாராது..

- மன்சூர்

அன்புள்ள அம்மா

அன்புள்ள அம்மா,

கர்ப்ப காலத்தில்
எட்டி உதைத்த போதெல்லாம்
பொறுத்(தாய்!)

ஆண் பிள்ளை - என்
கன்னத்தில் மையிட்டு
கண்மணியாக வளர்த்(தாய்!)

எப்போதும்
எனக்காகவே
வாழ்ந்(தாய்!)

எனக்கான
கனவுகளை - நீயே
சுமந்(தாய்!)

உறங்கும் போதும் - என்
கைவிரல் பிடித்து கொள்கிறாய்
உனக்கே தெரியாமல்
நான் வேறொரு கை பிடித்ததை
நீ அறியாமலேயே..

- மன்சூர் 

SHE is special


SHE is special to me
SHE filled my empty heart
SHE refilled my lonely life
SHE fulfilled my birth completely

SHE is special to me
SHE is special to me

who make me too lovable
who made me so enjoyable
who is very close to my heart

- manSoor 

காதலிக்க நேரமில்லை

உனக்கான
networkல்
உனக்காக
தனி sim வாங்கி
உனக்கென்று
ringtone set செய்து
உன் numberக்கு
dial செய்யும் போதெல்லாம்,
உனக்கான
தேவைகளில் busyயாகி போகும்;
எனக்கான
உன்னை துரத்தி துரத்தி
நேசிக்கிறேனே

நமக்கான
நேரம் என்று
எப்போது வரும் பெண்ணே ?


- manSoor 

பள்ளிக்கூடம்

தலையெழுத்துக்கான
கையெழுத்தைப் பழகிய கற்காலம்

துள்ளியோடி
ஆட்டம் போட்ட
கார்காலம்

புதுமுகங்கள்
அறிமுகமாகி
நட்பெனும்
துறைமுகம் சேர்ந்த
வசந்த காலம்

பழகியதோ
சில காலம்
கனவுகளில்
உயிர் வாழும்
நினைவுகளின்
பொற்காலம்..


- மன்சூர் 

பாசமுள்ள உறவுகள்..

தலையணைக்கும் 
தாய் மடிக்கும் 
போட்டியிட்டு 

தாய் வீட்டு 
சீதனத்தில் 
பங்கு கேட்டு 

தாய் மாமன் சீர்வரிசையில்,
மடியில் வைத்து 
மருகனுக்கு சடங்கு செய்யும் 

பாசமுள்ள 
உறவைப் போல் 
உலகில் இல்லை..


- மன்சூர் 

அம்மா..

Affection & Care is incomplete without U
Meaning for sacrifice is U
Meaning of inspiration is U
Always loving U
AMMA..

- manSoor 

மேலானது

கண்ணில்லாத காதல்

சிந்தை இல்லாத சொந்தம்

நன்றி இல்லாத
நட்பை விட

கூன் - குருடு - செவிடு - பேடு

எவ்ளவோ மேல்

- மன்சூர் 

I love you _madly

I still love you.
I still miss you.
I still need you.

I still dream of you.
I still care for you.
I just wish I could tell you.

I want to be yours
Not for a day,
Not for a year,

For a lifetime
I love you madly

- manSoor

ஜெய்ஹிந்த்!

நீ -
தொல்லையின்றி உறங்க தான்
எல்லையில் விழித்திருக்கிறோம்

அதிகாலையில்
உனக்கு
பகலவனின் தரிசனம்
எனக்கோ
பகைவனின் தரிசனம்

நெற்றி வியர்வை சிந்தினால் தான் - உன்
வயிறு நிறையும்
எனக்கோ
போரில் ரத்தம் சிந்தினால் தான்
மனம் நிறையும்

தீபாவளி, பண்டிகைகளில்
பட்டாசு வெடிக்கும்
இங்கே
திரும்பும் திசைகளில் எல்லாம் i
பட்டாளம் தெறிக்கும்

ரம்ஜான், விருந்துளில் எல்லாம்
மாமிச தலை உருளும்
இங்கே
ராத்திரி, பகல் முழுதும்
மானுட தலை உருளும்

நீ
நேசத்தை விளைவிக்க தான்
நாங்கள்
எல்லையில் வி(பு)தைக்கப்படுகிறோம்
JAIHIND!

- மன்சூர் 

கந்தல்

நான் ஒரு காகிதம்

தாயின் கையில்
கனவு கப்பலானேன்

தண்ணீரில் விட்டால்
தத்தளிப்பேன் என்று - தன்
கண்ணில் வைத்து கொண்டாள்
கத்தி கப்பல் என்று
அறியாமலேயே!

இன்றோ

காதலி கையில் பட்டமாகி
காற்றில் பறக்கின்றேன் - அவள்
அறுந்து போவேனோ என
இறுக பிடித்திருக்கிறாள்
நூலை விடாமல்

நான்
வாலறுந்த பட்டம் என
அறியாமலேயே!

நண்பர்களோ
கிறுக்கி வைத்த கவிதையென்று
ஊர் சொல்லி திரிகிறார்கள் - நான்
எழுத்து பிழையென
அறியாமலேயே

நானோ

கழுதை கூட
கண்டுகொள்ளாத
கந்தல் என்று
அறியாமலேயே!

- மன்சூர் 

பாவி மரம்

விதைத்து
தண்ணீர் விட்டு
ஆசையாய் வளர்த்த
பிள்ளை செடி

நீண்டு நெடுமரம் ஆன போது
மலர்ந்த அன்னை நெஞ்சம்

கொண்ட நேசத்தால்
வேலி தாண்டி
கிளை போகும் போது

வெட்ட மனமில்லாமல்
கண்ணீர் சிந்தும்
கருணை மனமே

உன் கண்ணீர் பட்டு கூட
பட்டு போகும் - இந்த
பாவி மரம்

- மன்சூர் 

காதல் மோதிரம்

நகம் கடிக்கிறேன் - என்
கவிதை விரலுக்கு
காதல் மோதிரம்
போடுவாயோ பெண்ணே?

அரிவாள் முறைக்கிறது - என்
கழுத்துக்கு மச்சான்
மைனர் சங்கிலி
போடுவாரோ பெண்ணே?

கண்கள் வேர்கிறது  - என்
கையில் சேர்வாயோ
காதல் பெண்ணே?

- மன்சூர்


'அவள்'

தீ பற்றாத
பூக்காடோ
உன் கண்கள்

தேய் பிறை இல்லாத
வானமோ
உன் நெற்றி

கந்தகமாகி போன
காந்தங்கள் தானோ
உன் கண்கள்

தொங்கல் தோட்டத்தின்
அனிச்சம் பூவோ
உன் செவிகள்

வண்டுன்னும்
செம்பூவோ
உன் இதழ்கள்

நேசத்திற்காக துடிக்கும்
நெஞ்சமோ - உன்
நல் இதயம்..

- மன்சூர்

ஒன்று சேர

உன் கோபம் -நீ
எனக்காக பிறந்தவள் என்று
நம்பிக்கை தந்தது

உன் புன்னகையோ -நீ
எனக்காக மட்டுமே பிறந்தாய் என்று
உறுதி செய்தது

எத்தனை முறை சண்டையிட்டாலும்
சண்டைக்கான காரணத்தை
மறக்கடிக்கும் உன் தூக்கமும்

எத்தனை முறைத்து கொண்டாலும்
உன்னையே தேடும்
என் கனவும்

ஒன்று சேரத்தான்
விழித்திருக்கிறேன்..

- மன்சூர்

பிரார்த்தனை

எல்லா கிழமைகளிலும்
பிள்ளைகளுக்காக
பிரார்த்தனை செய்யும்
பிரியமுள்ள அம்மாவிற்கு ..

உன்னோடு சேர்த்து
என்னை
கண்டிக்கவும்

எனக்கான
உன்னை
நேசிக்கவும்

இன்னொரு ஜீவன்
இணையப்போகிறது
நம் வீட்டில்

எனக்கான
உன் கவலைகள்
ஓய்வு பெற

விளிக்கின்றேன்
வெள்ளிக் கிழமையின்
வேண்டுதலாக ..

- மன்சூர்

மாமன் மனசு

பெண்ணே!

கூந்தலேறி
மணம் வீசும்
வாடா-மல்லி
மாமியின் மனம்
சொன்னதே

இந்த
மாமனின் மனம்
சொன்னதா?

- மன்சூர்

சுனாமி பெண்ணே

என்னை
கொண்டு போகவும்

கொன்று போகவும்
நீ இருப்பதாலேயே

கரை மேலே
காத்திருக்கிறேன்

உனக்குள்
என்னை
வாங்கி "கொல்"
சுனாமி பெண்ணே ..

- மன்சூர்

உரிமைப்போர்

அன்று

கட்டிப் பிடித்து உறங்க
தாய்

நேற்று
தலையணை

இன்று
மனைவி

நாளை
மகளும் - மனைவியும்

உறவுகள் தொடரும்
உரிமைப்போர்

- மன்சூர் 

ஒரு வார்த்தை

உடைந்து
உருக்குலைந்து வரும் போதெல்லாம்

உயிர் மீட்கும் - உன்
ஒரு வார்த்தை

"செல்லமாய்
சிநேகமாய் "
செவி குளிர
நீ கூறும்
நேசமிகு ஒரு வார்த்தை

ஆயுள் முழுதும்
அன்பு செய்ய
ஆணையிடும்
அமுத வார்த்தை

என்
பிறவிப் பலன்
அடைகிறேனடி அன்பே!

- மன்சூர்

கைமாறு..

உயிரில் கலந்த உறவே,

அலைபேசியில்
அன்பை பொழிகிறாய்!
கடைக் கண்களால்
கவிதை சொல்கிறாய்!
புருவங்களை உயர்த்தி கொண்டு
புன்னகை செய்கிறாய்!

தாய் - தந்தை
தோழன்
யாவரும்
கடிந்திடும் வேளையில் கூட
கொண்ட காதலால்
கனிவு பூக்கிறாய்..

கைமாறாய்
காதல் செய்கிறேன்
கண்மணியே..

- மன்சூர் 

beyond mY control..

Our meeting may be a fate
Our friendship may be a choice
But
Falling in love with you
is beyond my control

U make me a complete man
Ur love makes me perfect
Ur affection which changes my world
and
I'm in-complete without U..

I Love You
I Love You
I Love You
my dear
lovable love..

- manSoor

வண்டுன்னும் பூக்கள்!

வண்டுன்னும் பூக்கள்.,
சில நேரம் 
வாய் திறப்பதே இல்லை

மகரந்தம் போல - அவை 
மனசுக்குள் தூது வரும் 
இறுதியில்,
ரீங்காரமிடும் வண்டுகளோ .,
                                                      
மவுனத்தை
விடுவதில்லை...

சப்தமிடும் வண்டையும் 
மதிப்பதில்லை..

தென்றலையும் 
ஏற்பதில்லை..

முட்களின் மேல் காதல் பூத்து 
தேனில் மூழ்கி மூர்ச்சையாகிறது..

- 
மன்சூர்



தூர தேசம்..

மனிதரில்லா
தூர தேசம் தேடி
தொலைய வேண்டும்

காதல்,
கவலை

யாவும்
நீங்கி

நீட்சி பெற வேண்டும்..

- மன்சூர்

மேலானது..

கண்ணில்லாத காதல் 

சிந்தை இல்லாத சொந்தம் 

நன்றி இல்லாத நட்பை விட 

கூன் குருடு செவிடு பேடு 

எவ்ளவோ மேல்

- மன்சூர் 

பிரியமானவள்..

"பிரியமுள்ள
பெண்ணொருத்தி வேண்டும் .."

என்
அளவில்லா அன்பை
பங்கு போட

அர்த்தமுள்ள கோபத்தை
நேசிக்க

ஆழமான மௌனத்தை
புரிந்து கொள்ள

சின்ன சின்ன
ஊடல்களில்

செல்லமான
கோபங்களில்

பிரிந்து - சேரும்
தருனங்களில்

பிரியமாய்
கட்டிக்கொள்ளும்

பிரியமான - ஒரு
பெண் வேண்டும் ..

- மன்சூர்