Friday, 21 February 2014

அன்புள்ள அம்மா

அன்புள்ள அம்மா,

கர்ப்ப காலத்தில்
எட்டி உதைத்த போதெல்லாம்
பொறுத்(தாய்!)

ஆண் பிள்ளை - என்
கன்னத்தில் மையிட்டு
கண்மணியாக வளர்த்(தாய்!)

எப்போதும்
எனக்காகவே
வாழ்ந்(தாய்!)

எனக்கான
கனவுகளை - நீயே
சுமந்(தாய்!)

உறங்கும் போதும் - என்
கைவிரல் பிடித்து கொள்கிறாய்
உனக்கே தெரியாமல்
நான் வேறொரு கை பிடித்ததை
நீ அறியாமலேயே..

- மன்சூர் 

No comments:

Post a Comment