Friday, 21 February 2014

பாவி மரம்

விதைத்து
தண்ணீர் விட்டு
ஆசையாய் வளர்த்த
பிள்ளை செடி

நீண்டு நெடுமரம் ஆன போது
மலர்ந்த அன்னை நெஞ்சம்

கொண்ட நேசத்தால்
வேலி தாண்டி
கிளை போகும் போது

வெட்ட மனமில்லாமல்
கண்ணீர் சிந்தும்
கருணை மனமே

உன் கண்ணீர் பட்டு கூட
பட்டு போகும் - இந்த
பாவி மரம்

- மன்சூர் 

No comments:

Post a Comment