நான் ஒரு காகிதம்
தாயின் கையில்
கனவு கப்பலானேன்
தண்ணீரில் விட்டால்
தத்தளிப்பேன் என்று - தன்
கண்ணில் வைத்து கொண்டாள்
கத்தி கப்பல் என்று
அறியாமலேயே!
இன்றோ
காதலி கையில் பட்டமாகி
காற்றில் பறக்கின்றேன் - அவள்
அறுந்து போவேனோ என
இறுக பிடித்திருக்கிறாள்
நூலை விடாமல்
நான்
வாலறுந்த பட்டம் என
அறியாமலேயே!
நண்பர்களோ
கிறுக்கி வைத்த கவிதையென்று
ஊர் சொல்லி திரிகிறார்கள் - நான்
எழுத்து பிழையென
அறியாமலேயே
நானோ
கழுதை கூட
கண்டுகொள்ளாத
கந்தல் என்று
அறியாமலேயே!
- மன்சூர்
தாயின் கையில்
கனவு கப்பலானேன்
தண்ணீரில் விட்டால்
தத்தளிப்பேன் என்று - தன்
கண்ணில் வைத்து கொண்டாள்
கத்தி கப்பல் என்று
அறியாமலேயே!
இன்றோ
காதலி கையில் பட்டமாகி
காற்றில் பறக்கின்றேன் - அவள்
அறுந்து போவேனோ என
இறுக பிடித்திருக்கிறாள்
நூலை விடாமல்
நான்
வாலறுந்த பட்டம் என
அறியாமலேயே!
நண்பர்களோ
கிறுக்கி வைத்த கவிதையென்று
ஊர் சொல்லி திரிகிறார்கள் - நான்
எழுத்து பிழையென
அறியாமலேயே
நானோ
கழுதை கூட
கண்டுகொள்ளாத
கந்தல் என்று
அறியாமலேயே!
- மன்சூர்
No comments:
Post a Comment