Friday, 21 February 2014

கைமாறு..

உயிரில் கலந்த உறவே,

அலைபேசியில்
அன்பை பொழிகிறாய்!
கடைக் கண்களால்
கவிதை சொல்கிறாய்!
புருவங்களை உயர்த்தி கொண்டு
புன்னகை செய்கிறாய்!

தாய் - தந்தை
தோழன்
யாவரும்
கடிந்திடும் வேளையில் கூட
கொண்ட காதலால்
கனிவு பூக்கிறாய்..

கைமாறாய்
காதல் செய்கிறேன்
கண்மணியே..

- மன்சூர் 

No comments:

Post a Comment