Friday, 21 February 2014

ஜெய்ஹிந்த்!

நீ -
தொல்லையின்றி உறங்க தான்
எல்லையில் விழித்திருக்கிறோம்

அதிகாலையில்
உனக்கு
பகலவனின் தரிசனம்
எனக்கோ
பகைவனின் தரிசனம்

நெற்றி வியர்வை சிந்தினால் தான் - உன்
வயிறு நிறையும்
எனக்கோ
போரில் ரத்தம் சிந்தினால் தான்
மனம் நிறையும்

தீபாவளி, பண்டிகைகளில்
பட்டாசு வெடிக்கும்
இங்கே
திரும்பும் திசைகளில் எல்லாம் i
பட்டாளம் தெறிக்கும்

ரம்ஜான், விருந்துளில் எல்லாம்
மாமிச தலை உருளும்
இங்கே
ராத்திரி, பகல் முழுதும்
மானுட தலை உருளும்

நீ
நேசத்தை விளைவிக்க தான்
நாங்கள்
எல்லையில் வி(பு)தைக்கப்படுகிறோம்
JAIHIND!

- மன்சூர் 

No comments:

Post a Comment