வண்டுன்னும் பூக்கள்.,
சில நேரம்
வாய் திறப்பதே இல்லை
மகரந்தம் போல - அவை
மனசுக்குள் தூது வரும்
இறுதியில்,
ரீங்காரமிடும் வண்டுகளோ .,
மவுனத்தை
விடுவதில்லை...
சப்தமிடும் வண்டையும்
மதிப்பதில்லை..
தென்றலையும்
ஏற்பதில்லை..
முட்களின் மேல் காதல் பூத்து
தேனில் மூழ்கி மூர்ச்சையாகிறது..
- மன்சூர்
No comments:
Post a Comment