Friday, 21 February 2014

ஒரு வார்த்தை

உடைந்து
உருக்குலைந்து வரும் போதெல்லாம்

உயிர் மீட்கும் - உன்
ஒரு வார்த்தை

"செல்லமாய்
சிநேகமாய் "
செவி குளிர
நீ கூறும்
நேசமிகு ஒரு வார்த்தை

ஆயுள் முழுதும்
அன்பு செய்ய
ஆணையிடும்
அமுத வார்த்தை

என்
பிறவிப் பலன்
அடைகிறேனடி அன்பே!

- மன்சூர்

No comments:

Post a Comment