Friday, 8 November 2013

மா மனிதன்..

அணுவை துளைத்தான் 

அதை 
வெடித்து களைத்தான் 

பின்பு 
அழுது சலித்தான் 

அணு அணுவாய் 
அமைதி தொலைத்தான் 

அறிவியல் படித்த
மா மனிதன் 

- மன்சூர்

சேலையில் ஒரு தேவதை!

சேலை கட்டும் பெண்களில் 
அவள் மட்டும் 
தனி அழகு!

அவள்..
சேலையணிந்து சென்றால் 
துணிக்கடை பொம்மையும் 
உயிர் பெறும்!

வீதியுலா சென்றால் 
சாலையோர மனிதரெல்லாம் 
சிலையாய் மாறக் கூடும்!

அவளை கடந்து செல்லும் 
தென்றல் கூட 
உறைந்து போகும் பனியாக!

என்னவாக போகிறேனோ 
இன்னும் கொஞ்ச நாளில் நானும் ?

- மன்சூர்

மல்லிப்பூ ..

நடு நிசியில் 
மலர்ந்து 

நூற்பாவில் 
சேர்ந்து 

நடைவீதியில் 
கடை பரப்பி 

உன் கண்ணில் 
விழுந்து 

நீயும்
வாயாரக் கேட்டு 

நானும் 
மனதார வாங்கி 

என் கையாலேயே 
சூட 

"ஈ"யென பல் இளிக்கிறது  

உன் கூந்தலேறிய 
மல்லிப்பூ ..


- மன்சூர் 

தோள் சாய வா பெண்ணே!

கால் வலிக்க நடை பழகி 
களைப்பாகி போனாலும் 

இளைப்பாற 
தோள் சாய்வாய் பெண்ணே!

மழையோடு நீயிருந்து
குடையோடு நானிருந்தும் 

தலை துவட்ட 
தோள் சாய்வாய் பெண்ணே! 

எதிர் வரும் காலங்கள் 
எதிர்க்கின்ற போதிலும் 

இமைக்காமல் 
தோள் சாய்வாய் பெண்ணே! 

நேசமோ - நட்போ 
உயிர் போகும் ஒருநாளில் 

அழைக்காமல் 
தோள் சாய்வாய் பெண்ணே!

- மன்சூர்

அணு அணுவாய்..

DYNAMITE..

அறிவியலின் 
புதிய DIMENSION 

Alfred ன் 
அறிய INVENTION 

ஊக்கமற்ற 
ஊதாரிகள் 

அழிவுக்கு உட்படுத்தும் 
ஆக்கமுற்ற அறிவியல் 

அன்று..
முதலாம் உலக போரில் 
அமெரிக்கனும் ஜெர்மானியனும் 
வெடிக்க .,

இன்று

ஆத்திகனுக்கும் , நாத்திகனுக்கும் 
அரசாட்சிக்கும் ,  ஜனநாயகத்துக்கும் 
இயற்கைக்கும் , அறிவியலுக்கும் 
இடையேயான 
மரணப் போராட்டம் தான் 
வாழ்க்கை 

அணுவை துளைத்தான் 
அணு அணுவாய் 
அமைதியை தொலைத்தான் 
அறிவியல் படித்த
மா மனிதன் 

- மன்சூர் 



Thursday, 7 November 2013

பிறவி பயன்

அதிகாலையில் 
உன் குரல் 

cell phone இல் 
உன் sms  

அந்தி மாலையில் 
உன் வருகை 

நடு நிசியில் 
உன் கனவு 

ஆறுதலில் 
உன் கைகள் 

உனக்கான 
என் சமையல் 

கன்னக் குழியில் 
புன் சிரிப்பு 

கடைசி வரையிலும் 
உன் அன்பு 

போதும் பெண்ணே 
பிறவி பயனடையும் 
என் நேசம்!

 - மன்சூர் 

a "special gift"


I like your looking
Specially 
your specs eyes

I like your charming
Specially
your cute smile

I like your dressing
Specially 
your pink chudi

I like your cooking
Specially
that prawn fry

I like your speaking
Specially
your tamil slang

I like your gifting
Specially
the pinches 

- மன்சூர் 

ஓடி பழகலாம் வா பெண்ணே..



முதலாம் வயதில் 
தவழ ஆரம்பித்தோம் 

மூன்றாம் வயதில்
நடை பயில ஆரம்பித்தோம் 

இன்று
அகவை - முந்நூறு மாதங்கள்

ஓடி பழகலாம்
வா பெண்ணே!

- மன்சூர்

Thursday, 31 October 2013

பாலை

நீந்த தெரியாத பாலைவன-கப்பல்
நேசிக்க தெறியாத இதயம் 

இரண்டுக்கும்
சஹாரா தான் உலகம்

- மன்சூர் 

கனவு தேசம்

ஆட்டையை போடும் அறுபதுகளும் 
அரட்டை அடிக்கும் இருபதுகளும் 
சீராகும் வரை 

சீராகாது 
நம்-தேசம் 

-மன்சூர்

மௌனம்..

இங்கே சிலர் .,

வார்த்தைகளை 
விழுங்கி கொண்டு 

மௌனங்களின் 
புளித்த ஏப்பம் விடும் 

நண்பர்கள் 

- மன்சூர்

கவிதையின் ருசி

காகிதங்களை ருசிக்கும்
கோவேறுகளுக்கு 

தெரியாது
கவிதையின் ருசி 

- மன்சூர் 

ஏழையின் சிரிப்பில் ...

பசித்தோர்க்கு இலையிட்டு 
அவர்-தம் புன்னகையில் 
தெரியாத இறைவனையா?

வெறும்
கல்லுக்கு பாலூற்றி 
தேடுகிறாய் மா மனிதா!

- மன்சூர் 

faceBook

faceBook(முகநூல்)

தன் பதிவுகளுக்கு தானே 
வலிய வந்து விருப்பம் தெரிவிக்க கோறும் 
விந்தையான சந்தை!

போலி முகமூடிக்கு பின்னாலிருந்து 
சொற் போர் புரியும் 
பல அற்பங்களும் இங்கே உண்டு 

முகமூடி அணிந்து கொண்டு
மட் போர் புரியும்
சில சிற்பங்களும் உண்டு

சிலருக்கு
இது வேடிக்கை

பலருக்கும் இதுவே
வாடிக்கை

இங்கே
பெண்களின் நிழற் படங்களுக்கு கூட
பாதுகாப்பு இல்லை

ஆபாச சந்தையில்
அவற்றை
கூறு போட்டு விற்கின்றன சில
கூறு கேட்ட குப்பன்கள்

faceBook
நீச்சல் தெரிந்தவர்கள்
மூழ்கி போகும்
பாசி படிந்த
குட்டை

- மன்சூர்

நேசம்..

நேசத்தை விட்டு கொடுத்தேன்

தவிர

உன்னை 
நேசிப்பதை அல்ல

பெண்ணே ..

- மன்சூர் 

காதல் - திருவிளையாடல்

பிரிக்க முடியாதது
நீயும், உன் கோபமும்

பிரிய கூடாதது
நீயும், உன் குணமும்

சேர்ந்தே இருப்பது
சிரிப்பும், சிங்காரமும்

சேரக் கூடாதது
அழுகையும், அகங்காரமும்

சொல்ல கூடாதது
உன்னிடம் காதலை

சொல்லக் கூடியது
உன்னிடம் ரகசியத்தை

பார்க்க கூடாதது
உன் கண்கள்

பார்த்து ரசிப்பது
உன் கூந்தல்

ரசனை என்றால்
உன் சமையல்

சண்டைக்கு
நீ

நட்புக்கு
நான்

அழகுக்கு
நீ

அன்புக்கு
நான்

********

- மன்சூர் 

வின்னை தாண்டி வருவாயா?

பார்வையால் அறிமுகம் ஆனோம்,
மௌனங்களால் பேசிக் கொண்டோம்,

நெடுஞ்சாலை தூரம் எல்லாம் 
கை கோர்த்து நடந்து சென்றோம்,

சிறு சிறு சண்டைகளில் 
பிரியாமல் நேசம் செய்தோம்,

கண்முன் பேசாமல் 
கனவுகளில் சிநேகம் செய்தோம்,

உறவுகளிடம் அனுமதி வாங்கி,
ஆயுள் வரை அன்பு செய்ய
இதயம் துடிக்கிறது - உன்னை
வெளியே அழைக்கிறது

வீடு தாண்டி வருவாயா ?

- மன்சூர்

கொலைஞன்

பூக்களை
கொய்கிறான்

கொலைஞன்

காதல்
பூத்திட..

- மன்சூர் 

நெல்லை அல்வா

சுவைத்தால் மணக்கும்
மனதை உருக்கும்
உமிழ்நீர் சுரக்கும்
சுவையின் அதிசயம்

தாமிரபரணி ஆற்றுத் 
தண்ணீரோ
இல்லை
தாய் மனம் கொண்ட
பக்குவமோ

அத்தை வீட்டு சீதனம் போல் சுவைக்கும்
அல்வாவை
என்னவென்று சொல்வது? 

- மன்சூர் 

MAD

I still love you.
I still miss you.
I still need you.

I still dream of you.

I still care for you.
I just wish I could tell you.

I want to be yours

Not for a day,
Not for a year,

For a lifetime

I love you madly ♥ ..

- மன்சூர் 

பதிவு திருமணம்

எத்தனை முறை 
பேனா வாங்கினாலும் 

கையொப்பமிட்டு பார்க்கிறது 
மனசு
நாம் இணையும் 
அந்த ஒரு நாளுக்காக ♥ ..

- மன்சூர் 

Wednesday, 24 July 2013

பெண் புத்தி

நேசிப்பவளை தவிர 
எல்லோரிடமும் 
நேசத்தை 
நிந்திப்பது 
ஆண்-புத்தி 

அவன்
நேசத்தை தவிர
எல்லாவற்றையும்
சிந்திப்பது 
பெண்-புத்தி 

- மன்சூர் 

Monday, 15 April 2013

வானம் பாடி



ஆறாம் விரலே 
உனக்கு விடை கொடுத்த நாள் முதல்
நான் கேள்வி குறியாகி போனேன்


எண்ணத்தை விதைத்து 
எழுத்தை வளர்த்து - மருதச் சோலையிலே
விளைந்த கவிதை திணைகளை
அறுவடை செய்த - எம் கரங்கள்


ஆறாம் விரல் -நீ
இல்லாது கண்டு
வெம்புகிறது
விசும்புகிறது
விழலில் வீழ்ந்தது போல் விளிக்கிறது

உன் வசந்தம் 
வரும் வரை
வானம் பாடாதோ -இந்த
வானம் பாடி


- மன்சூர் 

Wednesday, 20 March 2013

ஒன்னும் புரியல





சமாதானமிட சொன்னாயோ 

மேலும் 
சண்டையிட சொன்னாயோ 
இல்லை 
சமாதியாக சொன்னாயோ
ஒன்றும்

விளங்கவில்லை  
இந்த மண்ணுக்கு

திரும்ப பெறுவது என்றால்?

இதயக் கடலில் 

எறிந்த கல்

ஈட்டியாய்
எறிந்த வார்த்தை

உயிரை கரைத்திட்ட
காலம்

ஊனமாக்கிய
பொழுது

எரிமலைக்குள்  பூத்த
நேசம்
 
இதில் 

எதை திரும்ப பெறுவது


என்
பேதை பெண்ணே!


- மன்சூர் 

மன்னிப்பாயா?

 உன் தோள் சாய்ந்து
விழி ஈரமாக்கி
கொட்டி தீர்க்க வேண்டிய 
விசும்பல்களையும்
தேம்பல்களையும் 

 
Bloggerலும்
face Bookலும்
twitter
லும்
பதிவு செய்கிறேன்

இதய கொலை புரிந்த
இழிஞ்சனாய்

பொது மன்னிப்பு
தருவாயோ?

- மன்சூர் 


சொதப்பல்..


கோடி வார்த்தை
பேச வேண்டி


ஒரு லட்சம் முறை
ஒத்திகைகள் பார்த்து


பல்லாயிரம் முறை
சொதப்பலாகி


சில நூறு முறை
சொல்லி பார்த்த
என்
இதய வார்த்தைகள்


உன்
ஒற்றைப் பார்வையில்
நொறுங்கி போகிறது!


(சொல்லாத காதல் - காதலே அல்ல; காதலை சொல்லாமல் தவிக்கும் அணைத்து இதயங்களுக்கும் இக்கவிதை சமர்ப்பணம்)

- மன்சூர் 

உள்ளிருப்பு போராட்டம்


உன்னோடு
நான் 

விழிக்காத 
வார்த்தைகள்
விழி பிதுங்கி 
மௌனமாகிறது

கதைக்காத 
சோகங்கள் 
கண்ணீர் ஆகிறது

எத்தணிக்கும் வார்த்தைகள் யாவும் 
எட்டி நீ போகையிலே 

எட்டி எட்டிப் பார்க்கிறது 
ஏட்டிக்கு போட்டியாகிறது

உதடு வரை 
வந்துவிட்டு 
உள்ளிருப்பு போராட்டம் செய்யும் 

வார்த்தைகளும்

என் 
நேசமும்

எப்போது 
உன்னை சரணடையும்

- மன்சூர் 





"விழித்திடு தோழா"

                
                                                                                                                                                  விழித்திடு தோழா விழித்திடு...

தலையணை உறக்கம்
கலைத்திடு தோழா
தமிழர்  உரிமைக்குரல் கேட்டு
விழித்திடு தோழா

கண்ணிருந்தும் குருடனாய்  

செவியிருந்தும் செவிடனாய் 
வாயிருந்தும் ஊமையாய் 
உயிரிருந்தும் வெற்றுடலாய்

இன்னும் எதனை காலம் - இந்த 
ஈனப் பிழைப்பு 
ஈழம் நம் அடையாளம் தானே 
அக்குலத்தோர் நம்மவர் தாமே ..

இன்னும் எதை காண 

காத்திருக்கிறோம்

தலை நகரம் 

கொலை நகரமாய் 
கொக்கரித்த போதும் -அங்கே 
உடன் பிறாவ ஒருத்தி 
உருக்குலைந்த போது 
உறுமிய குரல் எங்கே

உள்ளூரில்.,

உருக்குலைந்த 
உடன் பிறப்புக்காக 
கர்ஜித்த உரிமை எங்கே

மிச்சமிருக்கும் 

(ஈழ) தமிழர்களுக்கு 
குரல் கொடுக்க
யாருமிலர் நம்மை விட

இன்னுமொரு 

இனப் படுகொலை அரங்கேற
விதி செய்கிறது 
சதி கும்பல்

விழித்திடு தோழா 

விழித்திடு...    


- மன்சூர்    

Monday, 18 March 2013

சொல் பெண்ணே..


நான் 
போகும் பாதையில் 

பூத்தூறல்

சொல் பெண்ணே 
வந்து சென்றது 

நீ தானே!

என் 
வியர்வை மேனியில் 

பூவாசம்

சொல் பெண்ணே 
கடந்து சென்றது 

நீ தானே!

பருக்கை 
உண்ணுகையில் 

புரையேற்றம்

சொல் பெண்ணே 
நினைத்து கொண்டது 

நீ தானே!

பாதி 
தூக்கத்தில் 

உளறல் சத்தம்

சொல் பெண்ணே 
கனவில் வந்தது 

நீ தானே!

பேசும்
வார்த்தைகளில் 

உனது தாக்கம்

உண்மையை சொல் பெண்ணே 
இதயம் துளைத்தது 

நீ தானே!

- மன்சூர் 

வத்தி குச்சி..


உன்னோடு 
முட்டி 
மோதினாலும்
உரசி 
உறவாடினாலும்

எரிந்து போவதும் 
சாம்பலான பிறகு தொலைவில் 
எறியப்படுவதும்

நான் தானே
பெண்ணே!

- மன்சூர் 

Friday, 15 March 2013

காதலித்துப்பார்..



இமைகளில் வலை வீசி
இதயத்தை சிறைப்பிடித்து
பார்வைகளில்
பல்பு எரிக்கும்
மின்னோட்டம் கண்டதுண்டா?


காதலித்துப்பார்..


தொலைபேசியில்
தொலைந்து போகும்
அன்புத்தொல்லையை
உணர்ந்தது உண்டா ?


அன்பை விளைவிக்க
அன்பை விதைத்தது உண்டா

இதயத்தை தொலைக்கும்
இனிமையோ காதல்

இல்லை
உறவுகள் முதல் தோழர்கள் வரை
இணைக்கும்
வலிமையோ காதல்


எதிர்ப்புகளுக்கும்
எதிர்பார்ப்புகளுக்கும்
இடைப்பட்ட வாழ்கையின்
உண்மையான போராட்டத்தை
ஒருமுறையாவது
உணர்ந்தது உண்டா ?


களவில் விழுந்து
களவு போகும் கள்வன் யாருண்டு

கனவில் விழுந்து
காதல் ஜெயிக்கும் கலாபன் யாருண்டு
தெரிந்துகொள்ள


இன்றே

காதலித்துப்பார்..


- மன்சூர் 

Thursday, 14 March 2013

பின்புலம்..

என் மனக் கவிதையை
வாசிக்கும்
வாசகி அவள்


எனக்கு
ஆற்றல் தரும்
சக்தி அவள்


என் நேசமிகு
சகி அவள்


என்னுடைய
ஒவ்வொரு
கவிதைக்கு
பின்னும்


அவள் தான்
இருக்கிறாள்


- மன்சூர் 

Wednesday, 13 March 2013

நன்றி தமிழே..



நான்
கூடு கட்ட தெரியாத 
தூக்கணாங்குருவி


உன் இதய கூட்டில் இடம் தந்தாய்

பூரிப்பில்
கண்ணீர் வழிகிறது -என்
ஆறாம் விரலுக்கு


ஓயாமல் கரை வந்து போகும்
அலை போல
என் வலை பதிவுக்குள்
வந்து - கவிதைகளை
வாசிக்கும்


நல் -நேயர்களை
நல்கிய 

தமிழே
நன்றி!


- மன்சூர் 

பேரழகு..



நீ 
என் முகம் காட்டும்
கண்ணாடி


உன் பின்புலம்
யாதென
அறியாமலயே
என்னை அழகாய்
உணர்ந்தேன்

எனக்கு 
எழில் தந்து 

நீ மட்டும்
இருட்டில் கிடந்தாய் 


இன்றோ
பேரழகு ஆகிவிட்டாய்
என் நட்பே..


- மன்சூர் 

Tuesday, 12 March 2013

நீயும் நானும் - II


நீ -
நான்
வழக்கை


நம்மை இணைக்கும்
ஒற்றை புள்ளி 


காதல்  


சில சமயம்
நேர்கோடு


சில சமயம்
முக்கோணம்


இன்னும்

சில சமயம்
வட்டம்


கோணம்
எதுவாயினும்

புள்ளி ஒன்றே தான்

காதல்..

- மன்சூர் 

பிறந்தநாள் வாழ்த்துகள்..(Shreya Ghosal)



பெயரில் சங்கீதத்தை வைத்து கொண்டு 
மௌனத்தை
மொழி பெயர்க்கும்
பெண்களின் மத்தியில்


இசையை சுவாசிக்கும்
இசை-பிரியை நீ




உன்னை நேசிக்கும்
இசை வெறியர்களில் 

நானும் ஒருவன்

உன் இசைத் தென்றலுக்கு
தலை சாய்க்கும்
செடி போல் நானும்
தலையாட்டி  பொம்மை ஆனேன்


தாயின் தாலாட்டு போல
தினமும்
உன் குரல் கேட்டு
துயில்கிறேன்..


(உன்) இசை
இல்லை என்றால்
என்னவாகும்
(என்) வாழ்கை!


- மன்சூர் 

Monday, 11 March 2013

மகாகவியின் ஐயம்..

நாள் : மார்ச்-9-2013
இடம் : Pasha (Night_Pub @ சென்னை)
நேரம் : வயசு பசங்க உலா வரும் நேரம்


காற்றை கிழிக்கும் வேகம்

ஈசல் கூட்டமாய்
இளைஞர்  பட்டாளம்
புகையை கக்கும் 
கொள்ளிக்கட்டை  வாயர்கள் 

திடீரென
ஒரு ஐயம்

"தான்  கண்ட
புதுமைப்  பெண்
எங்கேவென"
கூகுளுக்குள் 
தொலைந்து போனார்
மகாகவி..

அன்று முப்பது கோடி முகமடைத்த பாரத மாதா
இன்றோ சதங்களை கடந்த சச்சின் ஆகவே
சற்றே தாமதம் ஆனது

பொதுத் தேர்வு எழுதிய
மாணவனின் தவிப்பு

தேர்தல் நாளுக்காக காத்திருக்கும்
எதிர் கட்சியின் வேகம்
அவருக்குள்ளே

தொலைக்காட்சி சீரியல்
போல
தொடர்ந்த
தேடல்
ஒரு வழியாக
முற்றுப் பெற்றது


பாரதி
தேடிய
புதுமை பெண்
பூவுலகில்
இப்போது

இல்லை என கூகிள் சொன்னது

இருந்தவர்களில் சிலர்
இறந்து போயிருந்தனர்

இன்னும் சிலர்
பூமத்திய ரேகையின்

மூலையில்
முகவரி தொலைந்து
போனார்கள்
காணி நிலம்
போதும் என்ற
முண்டாசு கவிஞன்
காணமல் போனான்
காரிருள் மறையும் முன்னால்..


- மன்சூர் 

பிழையென்ன செய்தேன்

கண்ணாளனே,

நாண் அறுந்த
வீணை போல
நானும்
நாணி
நின்றேன்.


பேட்சிழந்து
ஊமை ஆனேன்


உன்
சுடுஞ்சொற்கள்
என் நெஞ்சை
சுட்டபோது.


நேசம் வைத்த
நெஞ்சுக்குள்
நெருப்பு வைத்து
போகின்றாய்.


போகட்டும்


அனல் கூட
ஒரு நாள்
ஆறி விடும்.


ஆறாத் துயரில்  -என்னை
ஆழ்த்திப்  போகிறாய்.


போகட்டும்


துயர் கூட

ஒரு நாள்
நீங்கி விடும்.


ஆனால்


மௌனக்  கல்லெறிந்து
காயம் தருகிறாய்


சோகச் சிலுவைக்குள்  -என்னை
சிறை வைத்துச் 
செல்கிறாய்.


பிழையென்ன செய்தேன்?


உன் மௌன பூட்டுடைத்து
எந்தன்
துயர் நீக்கு.


இல்லை
நீங்கி செல்வது
என்றால்
என்னுயிரையும்
உன்னோடு
வாங்கி சென்று விடு.


என்

நெஞ்சை பிளந்து
போகிறவனே,


பூமி பிளவுற்று
மடியேந்த
என் தாய்
பூமாதேவி அல்ல;


மதுரைக்கு தீ வைத்து
முறையிட
இது ஒன்றும்
பாண்டியன் சபை அல்ல;


காதல்
பெருங்குற்றம் 
என்றால்,


முதலில்
ஆதாம்-ஏவாள்
கூண்டில் ஏறட்டும்!


என்னவனே,

தோல்வியை வெளிப்படுத்த
எந்த பெண்ணும்
தாடி வைப்பதில்லை


புண்பட்ட நெஞ்சுக்கு
புகைவிட தேவையும் இல்லை


ஆடவன் குடி கொண்ட
நெஞ்சினில்
ஆல்கஹால் சேர்வதும் இல்லை 


இவை எல்லா பெண்களுக்கும்
பொருந்துவதும் இல்லை


கொண்ட
காதலுக்கு
உதிரும்
என்
கண்ணீரே சாட்சி


எப்போதடா
எனக்கு
கொடுப்பாய்
மீட்சி
 


- மன்சூர் 

Friday, 8 March 2013

சிநேகிதியே..

கனவுகளை 
புதுபிக்க


நெஞ்சுறுதிக்கு

உரம் சேர்க்க
செல்லக் கோபத்தில்
புன்னகை கொப்பளிக்க

நடுநிசி வரை

விழித்திருந்து

முதல் ஆளாக

பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல

இடறி விழுகையில்

நேசக்கரம் நீட்ட

துயர் வரும் பொது

தோள் சாய

இரண்டுயிராய்

ஆயுள் நீட்டிக்க

கைக்கண்ணாடியாய்

முகம் காட்ட 

துவளும் போது

தோள் நிமிர்த்த

தோழியைப்  போல்

ஒரு துணையும் இல்லை

அவள் சிநேகத்தைப்  போல்

ஒரு உறவே இல்லை..

- மன்சூர்