Friday, 8 March 2013

சிநேகிதியே..

கனவுகளை 
புதுபிக்க


நெஞ்சுறுதிக்கு

உரம் சேர்க்க
செல்லக் கோபத்தில்
புன்னகை கொப்பளிக்க

நடுநிசி வரை

விழித்திருந்து

முதல் ஆளாக

பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல

இடறி விழுகையில்

நேசக்கரம் நீட்ட

துயர் வரும் பொது

தோள் சாய

இரண்டுயிராய்

ஆயுள் நீட்டிக்க

கைக்கண்ணாடியாய்

முகம் காட்ட 

துவளும் போது

தோள் நிமிர்த்த

தோழியைப்  போல்

ஒரு துணையும் இல்லை

அவள் சிநேகத்தைப்  போல்

ஒரு உறவே இல்லை..

- மன்சூர் 

No comments:

Post a Comment