Wednesday, 20 March 2013

உள்ளிருப்பு போராட்டம்


உன்னோடு
நான் 

விழிக்காத 
வார்த்தைகள்
விழி பிதுங்கி 
மௌனமாகிறது

கதைக்காத 
சோகங்கள் 
கண்ணீர் ஆகிறது

எத்தணிக்கும் வார்த்தைகள் யாவும் 
எட்டி நீ போகையிலே 

எட்டி எட்டிப் பார்க்கிறது 
ஏட்டிக்கு போட்டியாகிறது

உதடு வரை 
வந்துவிட்டு 
உள்ளிருப்பு போராட்டம் செய்யும் 

வார்த்தைகளும்

என் 
நேசமும்

எப்போது 
உன்னை சரணடையும்

- மன்சூர் 





No comments:

Post a Comment