Monday, 11 March 2013

மகாகவியின் ஐயம்..

நாள் : மார்ச்-9-2013
இடம் : Pasha (Night_Pub @ சென்னை)
நேரம் : வயசு பசங்க உலா வரும் நேரம்


காற்றை கிழிக்கும் வேகம்

ஈசல் கூட்டமாய்
இளைஞர்  பட்டாளம்
புகையை கக்கும் 
கொள்ளிக்கட்டை  வாயர்கள் 

திடீரென
ஒரு ஐயம்

"தான்  கண்ட
புதுமைப்  பெண்
எங்கேவென"
கூகுளுக்குள் 
தொலைந்து போனார்
மகாகவி..

அன்று முப்பது கோடி முகமடைத்த பாரத மாதா
இன்றோ சதங்களை கடந்த சச்சின் ஆகவே
சற்றே தாமதம் ஆனது

பொதுத் தேர்வு எழுதிய
மாணவனின் தவிப்பு

தேர்தல் நாளுக்காக காத்திருக்கும்
எதிர் கட்சியின் வேகம்
அவருக்குள்ளே

தொலைக்காட்சி சீரியல்
போல
தொடர்ந்த
தேடல்
ஒரு வழியாக
முற்றுப் பெற்றது


பாரதி
தேடிய
புதுமை பெண்
பூவுலகில்
இப்போது

இல்லை என கூகிள் சொன்னது

இருந்தவர்களில் சிலர்
இறந்து போயிருந்தனர்

இன்னும் சிலர்
பூமத்திய ரேகையின்

மூலையில்
முகவரி தொலைந்து
போனார்கள்
காணி நிலம்
போதும் என்ற
முண்டாசு கவிஞன்
காணமல் போனான்
காரிருள் மறையும் முன்னால்..


- மன்சூர் 

No comments:

Post a Comment