
அன்புள்ள அம்மா,
உன் மேல்
நான் கொண்ட அன்புக்கு
இன்று
அகவை 300 திங்கள்
ஆனாலும்
நீண்டு கொண்டே போகிறது
அன்பின் ஆயுள்
நம் மேல் நாம் கொண்ட
மாசற்ற அன்பும்
மட்டற்ற பாசமும்
அதன் காரணம்
என்னை உயிரினில் சுமப்பவளே
தலையணையில்
தலை வைக்கும் போதெல்லாம்
தாய் மடியே
உன் ஞாபகம் தானம்மா
வானில்
முழு நிலா வரும் போதெல்லாம்
நீ ஊட்டிய
நிலாச்சோறு ஞாபகம் தான்
ஊரெங்கும்
மகளிர் தின விருது கொடுக்கிறார்கள்
ஊருக்கே விருந்து வைக்கும்
அட்சய பாத்திரமே
வெள்ளி நரைத்தாலும்
சுமைகளை சுமக்கின்ற -உன் சிரசில்
மகுடம் சூட்டி
முத்தமிட்டு
விருது கொடுக்க
வேண்டும் அம்மா..
- மன்சூர்
No comments:
Post a Comment