Wednesday, 6 March 2013

கவிதைப் பிரசவம்


அவள்
ஒரு போராளியின் காதலி

மெய் எழுத்தோடு கலந்திட்ட
உயிராக - அவள்

அவன்
ஒரு பூச்செண்டின் காதலன்

பேனா முனையில்
போர் செய்யும் போராளி

அவர்கள்
மனம் மனணத்தில் கலந்தது

தேன் நிலவின் இரவில்
கலந்தனர்

ஐ இரு மாதங்களுக்கு
பின்அக் -கன்னி தமிழ் மொழியாள்
கவிதைகளை பிரசவித்தாள்
இன்னும்
பிரசவித்து கொண்டே இருக்கிறாள்

- மன்சூர் 

No comments:

Post a Comment