
இமைகளில் வலை வீசி
இதயத்தை சிறைப்பிடித்து
பார்வைகளில்
பல்பு எரிக்கும்
மின்னோட்டம் கண்டதுண்டா?
காதலித்துப்பார்..
தொலைபேசியில்
தொலைந்து போகும்
அன்புத்தொல்லையை
உணர்ந்தது உண்டா ?
அன்பை விளைவிக்க
அன்பை விதைத்தது உண்டா
இதயத்தை தொலைக்கும்
இனிமையோ காதல்
இல்லை
உறவுகள் முதல் தோழர்கள் வரை
இணைக்கும்
வலிமையோ காதல்
எதிர்ப்புகளுக்கும்
எதிர்பார்ப்புகளுக்கும்
இடைப்பட்ட வாழ்கையின்
உண்மையான போராட்டத்தை
ஒருமுறையாவது
உணர்ந்தது உண்டா ?
களவில் விழுந்து
களவு போகும் கள்வன் யாருண்டு
கனவில் விழுந்து
காதல் ஜெயிக்கும் கலாபன் யாருண்டு
தெரிந்துகொள்ள
இன்றே
காதலித்துப்பார்..
- மன்சூர்
No comments:
Post a Comment