Wednesday, 6 March 2013

மின்சரபூவே!


எப்படி
புரிய வைப்பேன்
பெண்ணே!


சுற்றும் இந்த உலகிற்கும்
விஞ்ஞானம் பரப்பும்
அந்த மானுட பொம்மைகளுக்கும்

நீர் முதல்
நிலக்கரி வரை
காற்று முதல்
கழிவு வரை
மின் உற்பத்திக்கு 
மூலப்பொருள்கள் ஏராளம்

எடிசனுக்கு புலப்படாதது
எனக்கு மட்டும் எப்படி?

உன் காந்த கண்ணில் 
மின்சாரம் உள்ளதென்று 
என்னால் மட்டும் 

எப்படி சொல்ல முடியும் 

இந்த பிரபஞ்சமே 
இருளில் மூழ்கினாலும்,
என்னில் மின்சாரம் பாய்ச்சும் 

உன் விழிகளை
வெளிச்சம் போட்டு காட்ட மாட்டேன்
காட்டவே மாட்டேன் 
மின்சரபூவே!


 - மன்சூர் 

No comments:

Post a Comment