Thursday, 7 March 2013

உலக மகளிர் தினத்திற்காக

தாயாக
பத்து மாதம் சுமப்பவளும் நீ
 பூமித்தாயாக
ஆயுள் வரை சுமப்பவளும் நீ

சகோதரியாக
அன்பு செய்வதும்
வகுப்பு தோழியாகி
வம்பு செய்வதும்
காதலியாகி
நெஞ்சில் கலகம் செய்வதும்
காயப்பட்ட நெஞ்சுக்குள்
மாமழை பொழிவதும் நீயே தான்

வலி தரும்
காதலும் நீ தான்

காதல் வாழ்வில்
வசந்தம் பூக்கும் மனைவியும் நீ தான்

வாழ்வின் சுக/துக்கங்கள் யாவிலும்
பங்கு கொள்ளும் நீ
ஆடவர் அனைவரின்
வெற்றிக்கு பின்னாலும் இருக்கின்றாய்

பெண்ணே!
தலை வணங்குகிறேன் ..

நீ இல்லை என்றால் 
என்னவாகும் -இந்த
உலக இயக்கம்?


- மன்சூர் 

No comments:

Post a Comment