Thursday, 7 March 2013

போ பெண்ணே போ ..


போ பெண்ணே போ..

இனி
உன்னை தேடும்
என் கண்களுக்கு
எப்படி புரிய வைப்பேன் ?

போ பெண்ணே போ

 உன்னை
வெறுக்கவும் மனம் இல்லை
விட்டு விலகவும்
துணிவு இல்லை

ஆனாலும்
என் காதல் உன்னோடு தான்..

அடித்தாலும்
வலியில் அழுதாலும்
உறங்கும் போது
தாயின் மடி தேடும்
பிள்ளை போல தான் நானும்
உன்னைத் தேடுவேன் ..

எனக்குள் உன்னை தேடும்
என்னுயிரே - என்  
உயிருக்குள் தான்
இருக்கின்றாய்
என்று உணரமாலே

போ பெண்ணே போ
என் உயிர் பூட்டின்
சாவியை
நீ கொண்டு செல்வதை
அறியாமலே

போ பெண்ணே போ..

உன்னை தேடும்
என் கண்களுக்கு
இனி 
எப்படி புரிய வைப்பேன் ?

 - மன்சூர் 

1 comment:

  1. உன்னை தேடும்
    என் கண்களுக்கு
    எப்படி புரிய வைப்பேன் ?

    ReplyDelete