Thursday, 7 March 2013

களவாடிய பொழுதுகள்

அன்னை மடியின்
அரவணைப்பே

தந்தை தோளின்
ஆறுதலே
 
தத்தி தவழும் வயதில்
என்
சுட்டுவிரல்
பிடித்து நடை பழகியவளே

ஒற்றை
தலையனைக்காக
நாமிருவரும்
சண்டையிட்ட மழலை இரவுகள்

மணல் வீடு
கட்டி விளையாடிய
அந்த
களவாடிய பொழுதுகள்

மீண்டும் வருமோ -அந்
நிலாக்காலம்
மீட்டு தருமோ நம்
விழாக்கோலம்

"அம்புலி கதை சொல்அண்ணா" வென்று
தோள் சாய்வாயே -இன்று
தோள் வரை வளர்ந்ததும்
தொலைவில் நிற்கின்றாயே

வளர்ந்தாலும்
நாம்
மழலைகள் தானடி
சகோதரி

- மன்சூர் 

No comments:

Post a Comment