அன்னை மடியின்
அரவணைப்பே
அரவணைப்பே
தந்தை தோளின்
ஆறுதலே
ஆறுதலே
தத்தி தவழும் வயதில்
என்
சுட்டுவிரல்
பிடித்து நடை பழகியவளே
என்
சுட்டுவிரல்
பிடித்து நடை பழகியவளே
ஒற்றை
தலையனைக்காக
நாமிருவரும்
சண்டையிட்ட மழலை இரவுகள்
தலையனைக்காக
நாமிருவரும்
சண்டையிட்ட மழலை இரவுகள்
மணல் வீடு
கட்டி விளையாடிய
அந்த
களவாடிய பொழுதுகள்
கட்டி விளையாடிய
அந்த
களவாடிய பொழுதுகள்
மீண்டும் வருமோ -அந்
நிலாக்காலம்
மீட்டு தருமோ நம்
விழாக்கோலம்
நிலாக்காலம்
மீட்டு தருமோ நம்
விழாக்கோலம்
"அம்புலி கதை சொல்அண்ணா" வென்று
தோள் சாய்வாயே -இன்று
தோள் வரை வளர்ந்ததும்
தொலைவில் நிற்கின்றாயே
தோள் சாய்வாயே -இன்று
தோள் வரை வளர்ந்ததும்
தொலைவில் நிற்கின்றாயே
வளர்ந்தாலும்
நாம்
மழலைகள் தானடி
சகோதரி
நாம்
மழலைகள் தானடி
சகோதரி
- மன்சூர்
No comments:
Post a Comment