Wednesday, 20 March 2013
உள்ளிருப்பு போராட்டம்
உன்னோடு
நான்
விழிக்காத
வார்த்தைகள்
விழி பிதுங்கி
மௌனமாகிறது
கதைக்காத
சோகங்கள்
சோகங்கள்
கண்ணீர் ஆகிறது
எத்தணிக்கும் வார்த்தைகள் யாவும்
எட்டி நீ போகையிலே
எட்டி எட்டிப் பார்க்கிறது
ஏட்டிக்கு போட்டியாகிறது
உதடு வரை
வந்துவிட்டு
வந்துவிட்டு
உள்ளிருப்பு போராட்டம் செய்யும்
வார்த்தைகளும்
என்
நேசமும்
"விழித்திடு தோழா"

விழித்திடு தோழா விழித்திடு...
தலையணை உறக்கம்
கலைத்திடு தோழா
தமிழர் உரிமைக்குரல் கேட்டு
விழித்திடு தோழா
கண்ணிருந்தும் குருடனாய்
செவியிருந்தும் செவிடனாய்
வாயிருந்தும் ஊமையாய்
உயிரிருந்தும் வெற்றுடலாய்
இன்னும் எதனை காலம் - இந்த
ஈனப் பிழைப்பு
ஈழம் நம் அடையாளம் தானே
அக்குலத்தோர் நம்மவர் தாமே ..
இன்னும் எதை காண
காத்திருக்கிறோம்
தலை நகரம்
கொலை நகரமாய்
கொக்கரித்த போதும் -அங்கே
உடன் பிறாவ ஒருத்தி
உருக்குலைந்த போது
உறுமிய குரல் எங்கே
உள்ளூரில்.,
உருக்குலைந்த
உடன் பிறப்புக்காக
கர்ஜித்த உரிமை எங்கே
மிச்சமிருக்கும்
(ஈழ) தமிழர்களுக்கு
குரல் கொடுக்க
யாருமிலர் நம்மை விட
இன்னுமொரு
இனப் படுகொலை அரங்கேற
விதி செய்கிறது
சதி கும்பல்
விழித்திடு தோழா
விழித்திடு...
- மன்சூர்
Monday, 18 March 2013
சொல் பெண்ணே..
நான்
போகும் பாதையில்
பூத்தூறல்
சொல் பெண்ணே
வந்து சென்றது
நீ தானே!
என்
வியர்வை மேனியில்
பூவாசம்
சொல் பெண்ணே
கடந்து சென்றது
நீ தானே!
பருக்கை
உண்ணுகையில்
புரையேற்றம்
சொல் பெண்ணே
நினைத்து கொண்டது
நீ தானே!
பாதி
தூக்கத்தில்
உளறல் சத்தம்
சொல் பெண்ணே
கனவில் வந்தது
நீ தானே!
பேசும்
வார்த்தைகளில்
உனது தாக்கம்
உண்மையை சொல் பெண்ணே
உண்மையை சொல் பெண்ணே
இதயம் துளைத்தது
நீ தானே!
- மன்சூர்
Friday, 15 March 2013
காதலித்துப்பார்..

இமைகளில் வலை வீசி
இதயத்தை சிறைப்பிடித்து
பார்வைகளில்
பல்பு எரிக்கும்
மின்னோட்டம் கண்டதுண்டா?
காதலித்துப்பார்..
தொலைபேசியில்
தொலைந்து போகும்
அன்புத்தொல்லையை
உணர்ந்தது உண்டா ?
அன்பை விளைவிக்க
அன்பை விதைத்தது உண்டா
இதயத்தை தொலைக்கும்
இனிமையோ காதல்
இல்லை
உறவுகள் முதல் தோழர்கள் வரை
இணைக்கும்
வலிமையோ காதல்
எதிர்ப்புகளுக்கும்
எதிர்பார்ப்புகளுக்கும்
இடைப்பட்ட வாழ்கையின்
உண்மையான போராட்டத்தை
ஒருமுறையாவது
உணர்ந்தது உண்டா ?
களவில் விழுந்து
களவு போகும் கள்வன் யாருண்டு
கனவில் விழுந்து
காதல் ஜெயிக்கும் கலாபன் யாருண்டு
தெரிந்துகொள்ள
இன்றே
காதலித்துப்பார்..
- மன்சூர்
Thursday, 14 March 2013
பின்புலம்..
என் மனக் கவிதையை
வாசிக்கும்
வாசகி அவள்
எனக்கு
ஆற்றல் தரும்
சக்தி அவள்
என் நேசமிகு
சகி அவள்
என்னுடைய
ஒவ்வொரு
கவிதைக்கு
பின்னும்
அவள் தான்
இருக்கிறாள்
- மன்சூர்
வாசிக்கும்
வாசகி அவள்
எனக்கு
ஆற்றல் தரும்
சக்தி அவள்
என் நேசமிகு
சகி அவள்
என்னுடைய
ஒவ்வொரு
கவிதைக்கு
பின்னும்
அவள் தான்
இருக்கிறாள்
- மன்சூர்
Wednesday, 13 March 2013
Tuesday, 12 March 2013
நீயும் நானும் - II

நான்
வழக்கை
நம்மை இணைக்கும்
ஒற்றை புள்ளி
காதல்
சில சமயம்
நேர்கோடு
சில சமயம்
முக்கோணம்
இன்னும்
சில சமயம்
வட்டம்
கோணம்
எதுவாயினும்
புள்ளி ஒன்றே தான்
காதல்..
- மன்சூர்
பிறந்தநாள் வாழ்த்துகள்..(Shreya Ghosal)

பெயரில் சங்கீதத்தை வைத்து கொண்டு
மௌனத்தை
மொழி பெயர்க்கும்
பெண்களின் மத்தியில்
இசையை சுவாசிக்கும்
இசை-பிரியை நீ
உன்னை நேசிக்கும்
இசை வெறியர்களில்
நானும் ஒருவன்
உன் இசைத் தென்றலுக்கு
தலை சாய்க்கும்
செடி போல் நானும்
தலையாட்டி பொம்மை ஆனேன்
தாயின் தாலாட்டு போல
தினமும்
உன் குரல் கேட்டு
துயில்கிறேன்..
(உன்) இசை
இல்லை என்றால்
என்னவாகும்
(என்) வாழ்கை!
- மன்சூர்
Monday, 11 March 2013
மகாகவியின் ஐயம்..
நாள் : மார்ச்-9-2013
இடம் : Pasha (Night_Pub @ சென்னை)
நேரம் : வயசு பசங்க உலா வரும் நேரம்
காற்றை கிழிக்கும் வேகம்
ஈசல் கூட்டமாய்
இளைஞர் பட்டாளம்
புகையை கக்கும்
கொள்ளிக்கட்டை வாயர்கள்
திடீரென
ஒரு ஐயம்
"தான் கண்ட
புதுமைப் பெண்
எங்கேவென"
கூகுளுக்குள்
தொலைந்து போனார்
மகாகவி..
அன்று முப்பது கோடி முகமடைத்த பாரத மாதா
இன்றோ சதங்களை கடந்த சச்சின் ஆகவே
சற்றே தாமதம் ஆனது
பொதுத் தேர்வு எழுதிய
மாணவனின் தவிப்பு
தேர்தல் நாளுக்காக காத்திருக்கும்
எதிர் கட்சியின் வேகம்
அவருக்குள்ளே
தொலைக்காட்சி சீரியல்
போல
தொடர்ந்த
தேடல்
ஒரு வழியாக
முற்றுப் பெற்றது
பாரதி
தேடிய
புதுமை பெண்
பூவுலகில்
இப்போது
இல்லை என கூகிள் சொன்னது
இருந்தவர்களில் சிலர்
இறந்து போயிருந்தனர்
இன்னும் சிலர்
பூமத்திய ரேகையின்
மூலையில்
முகவரி தொலைந்து
போனார்கள்
காணி நிலம் இடம் : Pasha (Night_Pub @ சென்னை)
நேரம் : வயசு பசங்க உலா வரும் நேரம்
காற்றை கிழிக்கும் வேகம்
ஈசல் கூட்டமாய்
இளைஞர் பட்டாளம்
புகையை கக்கும்
கொள்ளிக்கட்டை வாயர்கள்
திடீரென
ஒரு ஐயம்
"தான் கண்ட
புதுமைப் பெண்
எங்கேவென"
கூகுளுக்குள்
தொலைந்து போனார்
மகாகவி..
அன்று முப்பது கோடி முகமடைத்த பாரத மாதா
இன்றோ சதங்களை கடந்த சச்சின் ஆகவே
சற்றே தாமதம் ஆனது
பொதுத் தேர்வு எழுதிய
மாணவனின் தவிப்பு
தேர்தல் நாளுக்காக காத்திருக்கும்
எதிர் கட்சியின் வேகம்
அவருக்குள்ளே
தொலைக்காட்சி சீரியல்
போல
தொடர்ந்த
தேடல்
ஒரு வழியாக
முற்றுப் பெற்றது
பாரதி
தேடிய
புதுமை பெண்
பூவுலகில்
இப்போது
இல்லை என கூகிள் சொன்னது
இருந்தவர்களில் சிலர்
இறந்து போயிருந்தனர்
இன்னும் சிலர்
பூமத்திய ரேகையின்
மூலையில்
முகவரி தொலைந்து
போனார்கள்
போதும் என்ற
முண்டாசு கவிஞன்
காணமல் போனான்
காரிருள் மறையும் முன்னால்..
- மன்சூர்
பிழையென்ன செய்தேன்
கண்ணாளனே,
நாண் அறுந்த
வீணை போல
நானும்
நாணி
நின்றேன்.
பேட்சிழந்து
ஊமை ஆனேன்
உன்
சுடுஞ்சொற்கள்
என் நெஞ்சை
சுட்டபோது.
நேசம் வைத்த
நெஞ்சுக்குள்
நெருப்பு வைத்து
போகின்றாய்.
போகட்டும்
அனல் கூட
ஒரு நாள்
ஆறி விடும்.
ஆறாத் துயரில் -என்னை
ஆழ்த்திப் போகிறாய்.
போகட்டும்
துயர் கூட
ஒரு நாள்
நீங்கி விடும்.
ஆனால்
மௌனக் கல்லெறிந்து
காயம் தருகிறாய்
சோகச் சிலுவைக்குள் -என்னை
சிறை வைத்துச்
செல்கிறாய்.
பிழையென்ன செய்தேன்?
உன் மௌன பூட்டுடைத்து
எந்தன்
துயர் நீக்கு.
இல்லை
நீங்கி செல்வது
என்றால்
என்னுயிரையும்
உன்னோடு
வாங்கி சென்று விடு.
என்
நெஞ்சை பிளந்து
போகிறவனே,
பூமி பிளவுற்று
மடியேந்த
என் தாய்
பூமாதேவி அல்ல;
மதுரைக்கு தீ வைத்து
முறையிட
இது ஒன்றும்
பாண்டியன் சபை அல்ல;
காதல்
பெருங்குற்றம்
என்றால்,
முதலில்
ஆதாம்-ஏவாள்
கூண்டில் ஏறட்டும்!
என்னவனே,
தோல்வியை வெளிப்படுத்த
எந்த பெண்ணும்
தாடி வைப்பதில்லை
புண்பட்ட நெஞ்சுக்கு
புகைவிட தேவையும் இல்லை
ஆடவன் குடி கொண்ட
நெஞ்சினில்
ஆல்கஹால் சேர்வதும் இல்லை
இவை எல்லா பெண்களுக்கும்
பொருந்துவதும் இல்லை
கொண்ட
காதலுக்கு
உதிரும்
என்
கண்ணீரே சாட்சி
எப்போதடா
எனக்கு
கொடுப்பாய்
மீட்சி
- மன்சூர்
நாண் அறுந்த
வீணை போல
நானும்
நாணி
நின்றேன்.
பேட்சிழந்து
ஊமை ஆனேன்
உன்
சுடுஞ்சொற்கள்
என் நெஞ்சை
சுட்டபோது.
நேசம் வைத்த
நெஞ்சுக்குள்
நெருப்பு வைத்து
போகின்றாய்.
போகட்டும்
அனல் கூட
ஒரு நாள்
ஆறி விடும்.
ஆறாத் துயரில் -என்னை
ஆழ்த்திப் போகிறாய்.
போகட்டும்
துயர் கூட
ஒரு நாள்
நீங்கி விடும்.
ஆனால்
மௌனக் கல்லெறிந்து
காயம் தருகிறாய்
சோகச் சிலுவைக்குள் -என்னை
சிறை வைத்துச்
செல்கிறாய்.
பிழையென்ன செய்தேன்?
உன் மௌன பூட்டுடைத்து
எந்தன்
துயர் நீக்கு.
இல்லை
நீங்கி செல்வது
என்றால்
என்னுயிரையும்
உன்னோடு
வாங்கி சென்று விடு.
என்
நெஞ்சை பிளந்து
போகிறவனே,
பூமி பிளவுற்று
மடியேந்த
என் தாய்
பூமாதேவி அல்ல;
மதுரைக்கு தீ வைத்து
முறையிட
இது ஒன்றும்
பாண்டியன் சபை அல்ல;
காதல்
பெருங்குற்றம்
என்றால்,
முதலில்
ஆதாம்-ஏவாள்
கூண்டில் ஏறட்டும்!
என்னவனே,
தோல்வியை வெளிப்படுத்த
எந்த பெண்ணும்
தாடி வைப்பதில்லை
புண்பட்ட நெஞ்சுக்கு
புகைவிட தேவையும் இல்லை
ஆடவன் குடி கொண்ட
நெஞ்சினில்
ஆல்கஹால் சேர்வதும் இல்லை
இவை எல்லா பெண்களுக்கும்
பொருந்துவதும் இல்லை
கொண்ட
காதலுக்கு
உதிரும்
என்
கண்ணீரே சாட்சி
எப்போதடா
எனக்கு
கொடுப்பாய்
மீட்சி
- மன்சூர்
Friday, 8 March 2013
சிநேகிதியே..
கனவுகளை
புதுபிக்க
நெஞ்சுறுதிக்கு
உரம் சேர்க்க
செல்லக் கோபத்தில்
புன்னகை கொப்பளிக்க
புன்னகை கொப்பளிக்க
நடுநிசி வரை
விழித்திருந்து
முதல் ஆளாக
பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல
இடறி விழுகையில்
நேசக்கரம் நீட்ட
துயர் வரும் பொது
தோள் சாய
இரண்டுயிராய்
ஆயுள் நீட்டிக்க
கைக்கண்ணாடியாய்
முகம் காட்ட
துவளும் போது
தோள் நிமிர்த்த
தோழியைப் போல்
ஒரு துணையும் இல்லை
அவள் சிநேகத்தைப் போல்
ஒரு உறவே இல்லை..
- மன்சூர்
காதல் செய்வதே சித்தம்..
இதய துடிப்பில்
இருவேறு சப்தம்
இரவுப்பொழுதெல்லாம்
செல்போன் யுத்தம்
தலப்பாகட்டு பிரியாணியும்
தலையணையும்
இருந்த போதும்
ஊன் - உறக்கம்
இரண்டும் இல்லை
மெச்சும் நண்பர்கள்
மொய்க்கும் உறவினர்கள்
புடை சூழ இருந்தும்
தனிமையே என் நாட்டம்
தேடி வந்தோர் எல்லாம்
நாடி பிடித்து பார்க்க
நடை தளர்ந்த பெருசு முதல்
நடை பழகும் பொடிசு வரை
சொன்னார்கள்..
"தலை முதல்
கால் வரை பித்தம்"
இனி நீ
காதல் செய்வதே சித்தம்..
- மன்சூர்
Thursday, 7 March 2013
மையல் கொண்ட மயிலே..
புன்னகை வீசும் புயலே
ஏனடி
என் நெஞ்சக்கரையில்
மையம் கொண்டாய்
மையம் கொண்டது போதாதென
மையல் கொண்ட மயிலே உன் புன்னகையில்
வேரோடு சாய்ந்தது
மரம் மட்டும் அல்ல
என் மனசும் தான்..
என் இதய வானில்
சூழ்ந்து நிற்கும்
கருநீல மேகமே!
ஏனடி ..
முத்த மழையை
பொழிய மறுக்கிறாய்?
என் பருவக்கரையை
கடக்கும் முன்
ஒருமுறை -காதல்
பார்வை பாரடி
புயல் பெண்ணே!
- மன்சூர்
ஏனடி
என் நெஞ்சக்கரையில்
மையம் கொண்டாய்
மையம் கொண்டது போதாதென
மையல் கொண்ட மயிலே உன் புன்னகையில்
வேரோடு சாய்ந்தது
மரம் மட்டும் அல்ல
என் மனசும் தான்..
என் இதய வானில்
சூழ்ந்து நிற்கும்
கருநீல மேகமே!
ஏனடி ..
முத்த மழையை
பொழிய மறுக்கிறாய்?
என் பருவக்கரையை
கடக்கும் முன்
ஒருமுறை -காதல்
பார்வை பாரடி
புயல் பெண்ணே!
- மன்சூர்
களவாடிய பொழுதுகள்
அன்னை மடியின்
அரவணைப்பே
அரவணைப்பே
தந்தை தோளின்
ஆறுதலே
ஆறுதலே
தத்தி தவழும் வயதில்
என்
சுட்டுவிரல்
பிடித்து நடை பழகியவளே
என்
சுட்டுவிரல்
பிடித்து நடை பழகியவளே
ஒற்றை
தலையனைக்காக
நாமிருவரும்
சண்டையிட்ட மழலை இரவுகள்
தலையனைக்காக
நாமிருவரும்
சண்டையிட்ட மழலை இரவுகள்
மணல் வீடு
கட்டி விளையாடிய
அந்த
களவாடிய பொழுதுகள்
கட்டி விளையாடிய
அந்த
களவாடிய பொழுதுகள்
மீண்டும் வருமோ -அந்
நிலாக்காலம்
மீட்டு தருமோ நம்
விழாக்கோலம்
நிலாக்காலம்
மீட்டு தருமோ நம்
விழாக்கோலம்
"அம்புலி கதை சொல்அண்ணா" வென்று
தோள் சாய்வாயே -இன்று
தோள் வரை வளர்ந்ததும்
தொலைவில் நிற்கின்றாயே
தோள் சாய்வாயே -இன்று
தோள் வரை வளர்ந்ததும்
தொலைவில் நிற்கின்றாயே
வளர்ந்தாலும்
நாம்
மழலைகள் தானடி
சகோதரி
நாம்
மழலைகள் தானடி
சகோதரி
- மன்சூர்
நீயும் நானும் - I

கோடை வெயிலில்
ஒற்றை குடையின் கீழ்
ஒரே ஸ்ட்ரா போட்டு
இருவரும்
ஓசை இல்லாமல்
இளநீர் பருக வேண்டும்
ஒற்றை குடையின் கீழ்
ஒரே ஸ்ட்ரா போட்டு
இருவரும்
ஓசை இல்லாமல்
இளநீர் பருக வேண்டும்
எங்கு பிறந்திருகிறாயோ?
என் சித்திரை நிலவே
என் சித்திரை நிலவே
உன் நிழலில் நானும்
என் நிழலில் நீயும்
இளைப்பாற நடைப் பழக ஆசை
என் நிழலில் நீயும்
இளைப்பாற நடைப் பழக ஆசை
எங்கு பிறந்திருக்கிறாயோ?
என் நிஜமே
நீயும் நானும்
பொழுது சாய்ந்த வேளையில்
தனித் தீவில்
பகலவன் வெளிச்சத்தில்
பிறந்த நாள் கொண்டாட வேண்டும்
பொழுது சாய்ந்த வேளையில்
தனித் தீவில்
பகலவன் வெளிச்சத்தில்
பிறந்த நாள் கொண்டாட வேண்டும்
எங்கு பிறந்திருகிறாயோ?
என் தோழியே
- மன்சூர்
என் தோழியே
- மன்சூர்
போ பெண்ணே போ ..
போ பெண்ணே போ..
இனி
உன்னை தேடும்
என் கண்களுக்கு
எப்படி புரிய வைப்பேன் ?
உன்னை தேடும்
என் கண்களுக்கு
எப்படி புரிய வைப்பேன் ?
போ பெண்ணே போ
உன்னை
வெறுக்கவும் மனம் இல்லை
விட்டு விலகவும்
துணிவு இல்லை
உன்னை
வெறுக்கவும் மனம் இல்லை
விட்டு விலகவும்
துணிவு இல்லை
ஆனாலும்
என் காதல் உன்னோடு தான்..
என் காதல் உன்னோடு தான்..
அடித்தாலும்
வலியில் அழுதாலும்
உறங்கும் போது
தாயின் மடி தேடும்
பிள்ளை போல தான் நானும்
உன்னைத் தேடுவேன் ..
வலியில் அழுதாலும்
உறங்கும் போது
தாயின் மடி தேடும்
பிள்ளை போல தான் நானும்
உன்னைத் தேடுவேன் ..
எனக்குள் உன்னை தேடும்
என்னுயிரே - என்
என்னுயிரே - என்
உயிருக்குள் தான்
இருக்கின்றாய்
என்று உணரமாலே
இருக்கின்றாய்
என்று உணரமாலே
போ பெண்ணே போ
என் உயிர் பூட்டின்
சாவியை
சாவியை
நீ கொண்டு செல்வதை
அறியாமலே
அறியாமலே
போ பெண்ணே போ..
உன்னை தேடும்
என் கண்களுக்குஇனி
எப்படி புரிய வைப்பேன் ?
- மன்சூர்
உன்னை தேடும்
என் கண்களுக்குஇனி
எப்படி புரிய வைப்பேன் ?
- மன்சூர்
அன்புள்ள அம்மா..

அன்புள்ள அம்மா,
உன் மேல்
நான் கொண்ட அன்புக்கு
இன்று
அகவை 300 திங்கள்
ஆனாலும்
நீண்டு கொண்டே போகிறது
அன்பின் ஆயுள்
நம் மேல் நாம் கொண்ட
மாசற்ற அன்பும்
மட்டற்ற பாசமும்
அதன் காரணம்
என்னை உயிரினில் சுமப்பவளே
தலையணையில்
தலை வைக்கும் போதெல்லாம்
தாய் மடியே
உன் ஞாபகம் தானம்மா
வானில்
முழு நிலா வரும் போதெல்லாம்
நீ ஊட்டிய
நிலாச்சோறு ஞாபகம் தான்
ஊரெங்கும்
மகளிர் தின விருது கொடுக்கிறார்கள்
ஊருக்கே விருந்து வைக்கும்
அட்சய பாத்திரமே
வெள்ளி நரைத்தாலும்
சுமைகளை சுமக்கின்ற -உன் சிரசில்
மகுடம் சூட்டி
முத்தமிட்டு
விருது கொடுக்க
வேண்டும் அம்மா..
- மன்சூர்
உலக மகளிர் தினத்திற்காக
தாயாக
பத்து மாதம் சுமப்பவளும் நீ
பத்து மாதம் சுமப்பவளும் நீ
பூமித்தாயாக
ஆயுள் வரை சுமப்பவளும் நீ
ஆயுள் வரை சுமப்பவளும் நீ
சகோதரியாக
அன்பு செய்வதும்
வகுப்பு தோழியாகி
வம்பு செய்வதும்
காதலியாகி
நெஞ்சில் கலகம் செய்வதும்
காயப்பட்ட நெஞ்சுக்குள்
மாமழை பொழிவதும் நீயே தான்
வலி தரும்
காதலும் நீ தான்
காதல் வாழ்வில்
வசந்தம் பூக்கும் மனைவியும் நீ தான்
வாழ்வின் சுக/துக்கங்கள் யாவிலும்
பங்கு கொள்ளும் நீ
ஆடவர் அனைவரின்
வெற்றிக்கு பின்னாலும் இருக்கின்றாய்
வெற்றிக்கு பின்னாலும் இருக்கின்றாய்
பெண்ணே!
தலை வணங்குகிறேன் ..
நீ இல்லை என்றால்
என்னவாகும் -இந்த
உலக இயக்கம்?
தலை வணங்குகிறேன் ..
நீ இல்லை என்றால்
என்னவாகும் -இந்த
உலக இயக்கம்?
- மன்சூர்
Wednesday, 6 March 2013
அரும்புமீசை வயது ..
பருக்கள் முளைக்கும் - காதல்
பருவம் பொய்க்கும்
பருவம் பொய்க்கும்
அரும்பு மீசை வயது
குறும்பு செய்யும் மனது
குறும்பு செய்யும் மனது
பார்வைகள் பரிமாறி
இதயங்கள் பரிணாமிக்கும்
இதயங்கள் பரிணாமிக்கும்
பரஸ்பர பரவசம்
பிரியத்தின் பிரவேசம்
பிரியத்தின் பிரவேசம்
எடிசனின்
எள்ளு பேரனாய்
நாயகன் கண்களால் மின்சாரம் பாய்ச்ச
நாயகியோ பெருவிரலால் மன்கோலம் இடுவாள்
எள்ளு பேரனாய்
நாயகன் கண்களால் மின்சாரம் பாய்ச்ச
நாயகியோ பெருவிரலால் மன்கோலம் இடுவாள்
காதல் மொட்டு விட்டதும் - காதலி
கசக்கி எறிந்த
குப்பை காகிதம் பூக்களாகும்
காது குடைந்த கோழியிறகு கூட
பொக்கிஷம் ஆகும்
தொலைபேசி நண்பன் ஆகும்
நண்பன் தொல்லை ஆவான்
தலையணை துணையாகும்
தனிமை சுகமாகும்
- மன்சூர்
கசக்கி எறிந்த
குப்பை காகிதம் பூக்களாகும்
காது குடைந்த கோழியிறகு கூட
பொக்கிஷம் ஆகும்
தொலைபேசி நண்பன் ஆகும்
நண்பன் தொல்லை ஆவான்
தலையணை துணையாகும்
தனிமை சுகமாகும்
- மன்சூர்
மின்சரபூவே!
எப்படி
புரிய வைப்பேன்பெண்ணே!
சுற்றும் இந்த உலகிற்கும்
விஞ்ஞானம் பரப்பும் அந்த மானுட பொம்மைகளுக்கும்
நிலக்கரி வரை
காற்று முதல்
கழிவு வரை
மின் உற்பத்திக்கு
மூலப்பொருள்கள் ஏராளம்
எடிசனுக்கு புலப்படாதது
எனக்கு மட்டும் எப்படி?
மின்சாரம் உள்ளதென்று
என்னால் மட்டும்
எப்படி சொல்ல முடியும்
இந்த பிரபஞ்சமே
இருளில் மூழ்கினாலும்,
என்னில் மின்சாரம் பாய்ச்சும்
உன் விழிகளை
வெளிச்சம் போட்டு காட்ட மாட்டேன்
காட்டவே மாட்டேன்
மின்சரபூவே!
- மன்சூர்
அவசர தேவை..
நேசிக்க ஒரு பெண்-இதயம்
அவசரமாய் தேவை..
அவசரமாய் தேவை..
சாதி மதம் தேவையில்லை -பெண்
சாதி ஒன்றே போதும் எனக்கு
சாதி ஒன்றே போதும் எனக்கு
..
பொருத்தம் பார்க்க தேவையில்லை
பேஸ்புக் ஒன்றே போதும் எனக்கு
பேஸ்புக் ஒன்றே போதும் எனக்கு
சிற கடித்து பறக்க
CBZ இருக்கு
CBZ இருக்கு
வாய் விட்டு பேச
Vodafone இருக்கு
Vodafone இருக்கு
தேதி 1 ஆனால் -Accountல்
சம்பளம் இருக்கு
சம்பளம் இருக்கு
சாட்சி கையெழுத்து போட
Friends பட்டாளம் இருக்கு
Friends பட்டாளம் இருக்கு
இப்போ
என் தேவையெல்லாம்
என் தேவையெல்லாம்
நேசிக்க ஒரு பெண்-இதயம்
அவசரமாய் தேவை..
அவசரமாய் தேவை..
- மன்சூர்
காதல் வந்தால்..
"கம்பன் வீட்டு
கட்டு தறியும்
கவி பாடுமாம்"
அது சரி
இங்கே காதல் வந்தால்
காதலியின்
காதணியும்
கைக்குட்டையும்
கைவளையும்
கால் கொலுசும்
கவி பாடுகிறதே!
- மன்சூர்
கட்டு தறியும்
கவி பாடுமாம்"
அது சரி
இங்கே காதல் வந்தால்
காதலியின்
காதணியும்
கைக்குட்டையும்
கைவளையும்
கால் கொலுசும்
கவி பாடுகிறதே!
- மன்சூர்
கவிதைப் பிரசவம்
அவள்
ஒரு போராளியின் காதலி
ஒரு போராளியின் காதலி
மெய் எழுத்தோடு கலந்திட்ட
உயிராக - அவள்
உயிராக - அவள்
அவன்
ஒரு பூச்செண்டின் காதலன்
ஒரு பூச்செண்டின் காதலன்
பேனா முனையில்
போர் செய்யும் போராளி
போர் செய்யும் போராளி
அவர்கள்
மனம் மனணத்தில் கலந்தது
மனம் மனணத்தில் கலந்தது
தேன் நிலவின் இரவில்
கலந்தனர்
கலந்தனர்
ஐ இரு மாதங்களுக்கு
பின்அக் -கன்னி தமிழ் மொழியாள்
கவிதைகளை பிரசவித்தாள்
இன்னும்
பிரசவித்து கொண்டே இருக்கிறாள்
கவிதைகளை பிரசவித்தாள்
இன்னும்
பிரசவித்து கொண்டே இருக்கிறாள்
- மன்சூர்
Subscribe to:
Posts (Atom)