Friday, 3 February 2017

முதல் பிள்ளை

பிள்ளை குறும்பு
பல செய்தாலும்

தொல்லை
தொள்ளாயிரம் தந்தாலும்

செல்லக் குழந்தை நீ
-உன்னை
நெஞ்சில் சுமந்து
நேசம் ஊட்டி, உயிர் வளர்ப்பேன்

பிள்ளைகள் ஒன்பது
பிறந்தாலும்
- நீ தான் எனக்கு
முதல் பிள்ளை

என் கருவை சுமக்கும்
உயிரே
நீயும் எனக்கு
கருவே!

- மன்சூர் 

வா! தோழா வா!

வா தோழா வா

விவசாயம் பழக வேண்டும் - நாட்டு
விவகாரம் புரிய வேண்டும்

காவேரி இணைக்க வேண்டும்
காறாம் பசு அறிய வேண்டும்

இனம் கண்டு சேர வேண்டும்
ஈழம் கரை சேர்க்க வேண்டும்

வா தோழா வா

ஆல்கஹால்கள் அழிய வேண்டும் - நாட்டில்
அமைதி நிலவ வேண்டும்

பேதங்கள் நீங்க வேண்டும்
பேய் சாதிகள் ஒழிய வேண்டும்

பெண் கொடுமை ஓய வேண்டும்
பெரியார் கொள்கை உயர வேண்டும்

faceBook WhatsApp இல்
வசை பாடியது போதும் போதும்

வீதியில் வந்திறங்கி - புதிய
விதி படைப்போம்

வா தோழா வா!


- மன்சூர்

இன்னுமொரு கவிஞன் வேண்டாம்

இன்னுமொரு
கவிஞன் வேண்டாம் பெண்னே

இமை மையினை
திருத்தி கொள்

இதழ் சுளிவுகளை
நிறுத்தி கொள்

இடை அசைவினை
குறைத்து கொள்

இன்னுமொரு
கவிஞன் வேண்டாம் பெண்னே

கண்ண தாசன் முதல்
கமல் ஹாசன் வரை
காதல் தாசன்கள்
குறையவில்லை

- மன்சூர் 

மோட்சம்

வண்ணத்து பூச்சிகளை
வதைக்காதே பெண்ணே!

வண்ணம் பூசிக்கொண்டு - அவை
உன்னை மொய்க்கிறது
உண்மை பொய்க்கிறது

மோட்சம்
-அடைகிறது
முட்ட முட்ட
-தேன் குடித்து 

- மன்சூர்

பழகி கொல்லாதே!!!

மூன்றாம் உலகப்போருக்காக
முன்னவர் விட்டு சென்ற
-கன்னி வெடியே,

வெடித்து தொலைத்து விடாதே
அப்பள நெஞ்சை
உடைத்து நொறுக்கி விடாதே

-விலகி கொள்ளடி
-பழகி கொல்லாதே

- மன்சூர் 

மூன்றாம் உலகப்போர்

"மூன்றாம் உலகப்போர்
மூண்டாலும் மூளும்

முட்ட முட்ட முழிக்கும் - உன்
முட்டை கண்களுக்காக "

- மன்சூர் 

மையல்

பூக்களுக்கு மத்தியில்
புன்னகை வீசும் புயலே,

வாசம் கொண்ட பூக்கள் மீது
நேசம் கொள்ள வந்தாயோ!

நேசம் கொண்டு
நேசம் கொண்டு
நெஞ்சை கிள்ள வந்தாயோ!

வண்ணம் கொண்ட பூக்களையெல்லாம்
கன்னம் வைக்க வந்தாயோ!

மையல் கொள்ளும் பேரழகே
எந்த புயலின் சின்னம் நீ!?

இதய கரையில் மையம் கொண்டு
என்னை கொல்ல வந்தாயோ??

- மன்சூர்


பாவம் இந்தப் பூக்கள்

பாவம் இந்தப் பூக்கள்

உன்
-கூந்தல் காட்டில்
-குடியேற வேண்டி மலர்கிறது

நான்
-தொலைந்து போனது
-தெரியாமல்

- மன்சூர்  

ஏன்?

நாணம் கொண்ட நாணலே
நளினம் கூடி போனதேன்?

தலை கவிழ்ந்த தாமரையே
இதழ்கள் விரித்தும் தயக்கம் ஏன்?

தோகை விரித்த மயிலே
மேகம் சூழ்ந்தும் நிசப்தம் ஏன்?

அழகு பூக்கும் அல்லி பூவே
அரும்ப மறுக்கும் காரணம் என்ன

சிறகு முளைத்த செங்குயிலே
சிறகடிக்க மறந்தது ஏன்?

உலக பூக்களின் அணிவகுப்பே
புன்முறுவலின் ரகசியம் என்ன?

- மன்சூர் 

அமுதம்

அம்மா

காக்கைகள் எல்லாம்
கரைந்து கரைந்து

கக்கை ஆயின - காய்ந்த
சக்கை ஆயின

உன் - கைகளால்
அமுதம் உண்ணாமல்

- மன்சூர் 

விருந்து

வாழை இலை பரப்பி
வகை வகையாய்
உணவு சமைத்து

வக்கணையாய் சுவைத்திட
விருந்து -
பரிமாறும் உன் கைகள்

வயிறார உட்கொண்டு
மனதார பாராட்டும்
பசி கொண்ட என் நெஞ்சில்

குடி கொண்ட உன் சமையல்
ருசி கொண்ட நாவுக்கு - நீ
சமைத்தது பாயசம் என்றாலும்

பந்தியில் -
பரிமாறியது எல்லாமே
பாசம் தான் அம்மா!

- மன்சூர்

தாய்மை

பெண்ணே,

தாயுமானவனனும்
மாணவன் ஆகலாம்
உன்னிடம்.,

தாய்மை பயில

- மன்சூர்

சிக்கல்

கலைந்து போன - உன்
செங் கூந்தலில்
சிக்கி கொள்கிறதடி - என்
சின்னஞ் சிறு-மனசு!

- மன்சூர்

"போதும் கவிஞரே"

உன்
-கார்மேக கூந்தல் சூழ்ந்து

என்
-கவிதை மழை பெய்யும் போதெல்லாம்

உன்
-முந்தானை குடைபிடித்து

உன்
-புன்னகை மின்னல் ரசிக்க வேண்டும்

உன்
-கருவிழியின் மை கொண்டு
நான்
-காகிதத்தில் கிறுக்கும் போது

என்
-காதுமடலை காதலோடு
நீ
-கடிக்க வேண்டும்

உன்
-செவ்விதழின் சாயம் கொண்டு
நான்
-செவ்வாய் ரசம் வைக்க

நீ
-"போதும் கவிஞரே" என்று சொல்ல
நான்
- செல்லமாய் கோபம் கொள்ள வேண்டும்.

- மன்சூர்


உடன் பிறப்பு

எளிமையும் - அழகும்
அவளின்
உடன் பிறப்புகள்

சிகை முடிந்து
பூச்சூடி புரிய வேண்டியதில்லை
அவளின் அழகு

அதிகாலை சோம்பலில் கூட
அவள் அழகு தான்

- மன்சூர்


மண்~மனம்!

உன் மண்~மனம் மாறாத
சமையல் மணத்தில்
தாய் மனம் வீசுதடி
தாயுமானவளே!

இது தான்
மன்மத மனம் வீசும்
காதல் மனதின்
சமையல் மந்திரமோ?

- மன்சூர் 

இதய வீணை

இதய வீணைக்கு
இது
- வீணான ஆசை தான்.

- உன் இசை விரல்கள் தீண்டி
சங்கீத நாணேற்ற வேண்டுமென்று
சாரீரம் பாடுகிறது ..

- மன்சூர்




கலாச்சாரமும் ~ கற்பும்

இலைகளும் கொடிகளும்
மிருக தோள்களும்
நூல் இலைகளும்
போர்த்தி போற்றும்
கலாச்சாரமும்
கற்பும்

ஆடைகளை கொண்டே
அமைகிறது என்றால்

ஏவாளின்
ஆப்பிளே
ஆடையாகி இருக்கலாம்.

- மன்சூர்


பட்டாம் பூச்சி

படபடக்கும்
பட்டாம் பூச்சியாகிறது
இதயம்

மொட்டு விட்ட
முல்லையே

இன்று -உன்
பிறந்த நாள்
என்பதாலா?

- மன்சூர் 

உன் பிறந்த நாள்!

மத்தாப்பு புன்னகையில்
புத்தாடை பளபளக்கும்
பொன்னாள் -உன்
பிறந்த நாள்!

மகிழ்ச்சி பொங்கலில்
சர்க்கரை நினைவுகளிட்டு
கரும்பின் தித்திப்போடு
ஆடிப் பெருக்கை போல்
பெருகி வர வேண்டும் -நீ
நலங்கள் பெற வேண்டும்

வளமையும்
வலிமையும்
உன்னோடு
வாழ்வாங்கு வாழட்டும்

- மன்சூர் 

இதய வானம்

முந்நூறு திங்கள் 
முன்னே பிறந்த 
முழு நிலவே! 

காதல் மேகங்கள் கடந்து 

எப்போது உதித்தாய் 
என் இதய வானில்.. 

- மன்சூர் 


வெண்பா

பூவையே

நீ
பூமிக்கு வந்து சேர்ந்த நாள் முதல்

மொட்டாகி
பூவாகி
உன் கூந்தல் காட்டில்
குடியேற
பூத்துக் குலுங்கும்
பூங்~காட்டை

இப்படி
பூ~நெஞ்சோடு அணைத்து
பாசம் காட்டும்
உன் பெருங் கருணையை
பேரன்பை

புகழ் பாட
வெண்பா இல்லாமல்
வாயடைத்து போகின்றேன்!

- மன்சூர் 

தோள் சேரடி தோழி..

தோள் கொடு
தோள் சாய்
துணைவி ஆகு - என்
தோழியான பெண்ணே!

- மன்சூர் 

friendSHIP

தோழியாக
அறிமுகம் ஆனாய்

புது நட்பில்
நம்பிக்கை கொண்டாய்

அன்பால்
ஏறுமுகம் கண்டோம்

சில பொழுதுகளில்

பிரிவால்
இறங்கு முகம் கண்டோம்

இன்று
நெஞ்சில் நீங்கா
துறைமுகம் ஆகி
நங்கூரமிட்டாய்
நட்பே ..

(Dedicated to all firends!)

- மன்சூர் 

விடியல்

இனி வரும்
இளவல் பொழுதுகள் எல்லாம்
உன் விழி~முகம் பார்த்து
விடிய வேண்டும்
உயிரே ..

- மன்சூர் 

தாயுமானவள்

கைவிரல் கோர்த்தாய்
கவலைகள் தீர்த்தாய்
துணையாக வந்தாய்
துயரங்கள் தீர்த்தாய்..

பார்வையில் கண்டித்தாய்
கோபத்தில் தண்டித்தாய்
புன்னகையில் மன்னித்தாய்
என் தாயுமான தாயே!

- மன்சூர்

முகவரி நீ ..

என் முகவரி நீ
முகவரியின் முதல் வரி நீ

உன்னை
கண்ட இடத்தில தான்
நான் தொலைந்து போனேன்

உன்னை
கண்ட பிறகு தான்
வாழ்வின் அர்த்தம் கண்டேன்

- மன்சூர் 

மழலை பெண்ணே..

முன் செய்த பாவங்கள் யாவும்
உன்
புன்~சிரிப்பில் தொலைவதினாலே
நானும்
புனிதன் ஆகிறேன்
மழலை பெண்ணே..

- மன்சூர் 

திருநாள்

நான்
தேடித் திரிந்த தேவதை
நீ தான்
நீயே தான்

நான்
இதுநாள் வரை
சேர்த்து வைத்த
நேசமெல்லாம்
உனக்கு தான்
உனக்கே தான்

உனக்கான என் நேசம்
உன்னோடு துவங்கும்
திருநாள் தான்
எனக்கான பிறந்தநாள்!

- மன்சூர்

ஒரு நாள் வாழ்க்கை..

ஒரு நாள் மட்டுமே
வாழ்க்கை என்றால்

உன் விழி வெளிச்சத்தில்
நான் உயிர் வாழ வேண்டும்
ஈசல் போல

- மன்சூர்


மீன்~கண்கள்

உன்னை
தேடிவந்த நான்
தொலைந்து போனதும்;

தொலைந்து போன என்னை
மீட்டெடுத்ததும்;

மீள முடியாத உன்
மீன் - கண்களில் தான்!

என்னை
கொன்று திண்பதும்,
தின்று கொல்வதும் - உன்
கண்களின் களவுத்தனமா?

பார்வையால்
வீழ வைப்பதும்,
வாழ வைப்பதும் - உன்
கண்களின் கள்ளத்தனமா?

இமைத்து, இமைத்து
இம்சிக்கிறாய்
என் இளமையை ஏனடி
வஞ்சிக்கிறாய் கண்ணே!

- மன்சூர் 

முன்பே வா

இத்தனை நாளாய்,
இளமை முழுவதும்;
நான் - சேர்த்து வைத்த;
மொத்த அன்பையும்;
முத்தமாய் முதலீடு செய்ய;
முன்பே வா - என்
அன்பே வா!

- மன்சூர் 

கனவு இல்லம்

பெண்ணே
நான் விரும்புவதெல்லாம்
எனக்கான "பெண் புலமாய்" நீயும்
உனக்கான "பின் புலமாய்" நானும்
நமக்கான ஒரு வாழ்வு

அதில்

நமக்கே நமக்கான கனவுகள்
நேசத்தில் - உறவு விதைத்து
நேசத்தில் - உரிமை வளர்த்து
நேசத்தில் சுவர் எழுப்பி
நேசத்தால் நிறைய வேண்டும் - நம் வீடு

நீ என் கனவாக
நான் உன் கண்களாக
அமைய வேண்டும்
- நம் கனவு இல்லம்
அதையே விரும்புகிறது
- என் அன்பு உள்ளம்


வரம்

ஒரே பிறவியில்
இரண்டு வரம்

தோழியாக
துணைவியாக
நீ..

- மன்சூர் 

சுவாசம்

தேவதைகளை
நம்பியது இல்லை
நீ வரும் வரை.

வேதனைகள்
வந்தது இல்லை
நீ இருக்கும் வரை.

தனிமைகளில்
வாழ்ந்திருக்கேன்
நீ வரும் வரை.

இன்று .,

தனிமை வலி
தெரியவில்லை
நீ இருக்கும் வரை.

தன்னை நேசிக்க கற்று தந்தாய்
உன்னை நேசிக்கும்
என் இதயம் -அது
வேறு எதையும்
யோசிக்க பழகவில்லை
உன்னை யாசிக்கும் என்னுயிர்க்கு
உன்னையே சுவாசிக்க
பழகி கொன்டேன்.

- மன்சூர்

Tuesday, 30 August 2016

எது வீரம்?

எது வீரம்?

புளிய மரங்களின்
பேய் கதைகளை கடந்து,
பள்ளி செல்லும்
பிஞ்சு குழந்தைகளின்.,
நெஞ்சுரம் - வீரம் !

அரச மரங்களின்
கட்டுப்பாடுகளை கடந்து
வாழ்ந்து காட்டும்
கைம்பெண்களின்
நம்பிக்கை - வீரம்!

அசோக மரங்களின்
நிழல்களை கடந்து
இமயத்தின் பனியில்
தேசம் காக்க போரிடும்
இதயம் - வீரம்!


- மன்சூர் 

குமரிக்கோட்டம்


Metro சிட்டியின்
Melody சாக்லேட்டுகள்

IT பார்க்கின்
iTune ரிங்டோன்கள்

Walking போகும்

Digital பெண்களின்
parking தோட்டம்

எங்கள்
சென்னை கோட்டம்

- மன்சூர் 

மங்கையர் வீரம்!

முன்னர்..
முறம் கொண்டு
புலியை ஓடச் செய்த
எம் மூதாதையர்
பெண்களின் வீரம்!

அவர் தம்
மடிப்பால் புகட்டி
பிள்ளைகளின்
மணப்பாலில்
புகட்டியது வீரம்!

போர்க்களத்தில்
ஆடவர்க்கு நிகராய்
நின்று - போர் மரபுகளை வென்று
சரித்திரம் படைத்த
வெற்றி மங்கையர் வீரம்!

தன நெற்றி திலகத்தினாலும்
தொப்புள் கொடி உறவினாலும்
தன் இன்னுயிர் நீந்து
சுதந்திர தாகம் தனித்த
தியாக செம்மலின் வீரம்!

 - மன்சூர் 

சிங்கார புன்னகை

பெண்ணே..

அன்பும் நீ
அறிவும் நீ
அழகின் உச்சம் நீ

ஆடையில் நேர்த்தி கொண்டால் - அது
உறுத்தாமல் இருந்தால் - இங்கே
துயில் உரிப்பார் இல்லை

அகங்காரம் கொள்ளாதே பெண்ணே
அலங்காரம் தேவை தான்
அது உன் புன்னகையில் மட்டும் இருக்கட்டும்

- மன்சூர்

Tuesday, 26 April 2016

Night shift

Sun set ஆகி
Moon settle ஆக
மின் விளக்குகள்
Metro city யை
ஒளிர வைக்கும் நேரத்தில்
தொடங்குகிறது - என்

Night shift வாழ்க்கை

 - மன்சூர் 

சூதானம்

சூதானமாக இருடி - என்
சிறுக்கி,

சுள்ளி பொறுக்க போற இடத்துல
சுள்ளான் பயலுக திரிவாங்கே

மனசை கலைக்க தான்
மாடு மேச்சி வருவாங்கே

களவானி பயலுக
கண்ணால வலை விரிப்பாங்கே

சோலிய பாரு புள்ள

அசந்தா
ஆட்டைய போட்டுடுவாங்கே

உசுருக்கு உலை வச்சிருவாங்கே
உசுப்பி விட்டு போயிருவாங்கே

பொட்டச்சி இடம் கொடுத்த
பட்டரைய போட்டுருவாங்கே

மானம் தான் உசுரு புள்ள - அதை
மனசுக்குள்ள பதிஞ்சிக்க

மத்ததெல்லாம் கொசுறு புள்ள
மருவாதையா புரிஞ்சுக்க

ஒழுக்கமா நீ இருந்தா
கண்ணகி -னு சொல்லுவாங்கே

ஒழுக்கங் கெட்டு போனாக்க
ஊர் பழியை போடுவாங்கே

கருக்கலுக்கு முன்னே
வீடு சேர்ந்து விடு

சூதானமாக இருடி - என்
செல்ல சிறுக்கியே..

- மன்சூர்





Monday, 25 April 2016

பாதகத்தி

பாவமென்ன செஞ்சேன் - பாதகத்தி
பாவமென்ன செஞ்சேன்
பத்து மாசம் சுமந்தேன்  - உன்னை
பாரமுன்னு நினைச்சேனா

வயிற்றில் எட்டி உதைச்ச போதேல்லாம்
பெருமையா நினைச்சேன்
வறுமைக்கு பிறந்தாதால் - உன்னை
சாபமுன்னு நினைச்சேனா

பெண்ணாய் பிறந்ததால்
செலவுன்னு நினைச்சேனா
கள்ளிப்பால் தந்து
கருணை கொலை செஞ்சேனா

நடை வண்டி பழக வச்சேன்
நடக்கையில முத்தம் வச்சேன்
விதை நெல்லு வித்து தானே
பள்ளிக்கு அனுப்பி வச்சேன்

தாவணிப் பூ பருவம் வர
பருத்தி காட்டை அடகு வச்சி
பச்சை ஓலையில் குத்த வச்சி
ஊரெல்லாம் விருந்து வச்சேன்

கல்லூரி படிக்க வைக்க
கழனியெல்லாம் வித்து வைச்சேன்
பட்டம் வாங்குன; பட்டினமும் போன
வயித்தில் நெருப்போடு, வழியும் அனுப்பி வச்சேன்

பருத்தி நெஞ்சுக்குள்ள
காதல் நெருப்பு விழுந்துச்சா
பொழப்பு பார்த்த இடத்தில்
மனசை தொலைச்சியா

அப்பன் இல்லை
ஆண் மகனும் இல்லை
உன்னை ஆளாக்கி
மனுஷியா வளர்த்தேனே

ஆத்தா தடுப்பேன்னு - நீயே
உன் வாழ்க்கைய தேடி போனாயோ
ஊரே பழிக்குமடி
வீட்டுக்கு வந்து விடு

சாதி கொலை நடக்கும் - நம்
சமத்துவ பூமியில
சாதிக்க பிறந்தவளே - காதல்
சகதியில் விழுந்தாயோ

ஆத்தா வைய மாட்டேன்
மனசு கலங்காதே
அவுகள அழைச்சிக்கிட்டு
வீட்டுக்கு வா புள்ள

மிச்சமிருக்கும் - இந்த
மண்ணு குடிசையில - என்
உசுரு போகும் முன்னே
ஊருக்கு வா புள்ள

("பெத்து, வளர்த்து, அறிவூட்டி, ஆளாக்கி பிள்ளைகளுக்காக கனவு காணும் பெற்றோருக்கு இந்த கவிதை சமர்ப்பணம்")

- மன்சூர்














ஆப்பிள்

ஆதாமும் ஏவாளும்

ஆப்பிளுக்கு பதிலாக
பப்பாளி சாப்பிட்டிருக்கலாம்

இன்று ..

பட்டினிச் சாவுகள்
பழி பாவங்கள்
பகைமை உணர்வுகள்
இருந்திருக்காது.

- மன்சூர்

Friday, 22 April 2016

கேள்வி கேட்காதே..

நாம்
காற்றலையில் காசு பார்ப்போம்
ஊழல் என்று புலம்பாதே

மதுக்கடைகள் அடைக்காமல்
மனைவியர் தாலி அறுப்போம்
மனு நீதி கேட்டு திரியாதே

காவிரியோ
கட்சத்தீவோ - எதையும்
கேட்டு தொலைக்காதே

நாம் - வழங்கிய
வண்ண தொலைக்காட்சியில்
அழுகாச்சி தொடர்கள் பார்த்தாயா

உண்டு களித்தாயா
IPL கண்டு திளைத்தாயா
எனில் மது அருந்தி மட்டையாகு

போதை தெளிந்தால்
புகையிலைக்கு ஆதரவு கொடு
புத்தி மட்டும் தெளியாதே

பிள்ளைகள் படிக்க
தனியார் பள்ளிக்கு போ - ஆனால்
அரசாங்க வேலை மட்டும் கேட்காதே

மில்லியனில் கடன் கேளு
பெயர் மட்டும்
மல்லையாவாக இருக்கட்டும்

ஓட்டு போடு - அல்லது
தேர்தலை புறக்கணி - ஆனால்
கேள்வி மட்டும் கேட்காதே

- மன்சூர்




Thursday, 21 April 2016

ஏழையின் கோவணம்

மறியல்கள்
போராட்டங்கள்
பேச்சுவார்த்தைகள்
கடிதங்கள்

எதற்கும் மசியவில்லை
ஒரு சொட்டு கூட கசியவில்லை
கர்நாடகத்து
காவிரி..

"திறவாய் அணையே"  என்று
வாய் பிளந்து நின்று
விளை நிலம் பாலையாயனது
விவசாயம் பாழானது

தண்ணீ ர் அரசியலானது
நீதி வாயைப் பொத்திக்கொண்டது
அரசு கண்ணைக் கட்டிக்கொண்டது
அறுவடை செய்தவனின் கோவணத்தில்

 - மன்சூர்

தொப்புள் கொடி

அகவை ஐநூறு திங்கள் ஆனாலும்
அன்பு மாறாத
தொப்புள் கொடியே

ஆராரிரோ பாடி
தூங்க வைக்கும்
அன்னை மடியே

உன்னை நினைக்கையில்
கண்கள் நனையுதம்மா

- மன்சூர் 

Monday, 18 April 2016

நட்பதிகாரம்

எல்லா சீசன்களிலும்
பூப்பது
நட்பு ஒன்று தான்
இலையுதிர் காலம் இங்கில்லை.

எல்லா புயல்களையும்
கடந்து நிற்பது
FRIEND-SHIP ஒன்று தான்
வானிலை ஏதும் தேவையில்லை

எல்லா RACEலும்
வெற்றி பெறுவது
தோழமை ஒன்று தான்
முயலாமை இங்கில்லை.

செல்லக் கோபத்தில்
சின்ன சின்ன சண்டைகளில்
புன்னகை மலர்வது நட்பில் தான்
EGO-க்கள் இங்கில்லை.

நடுநிசி வரை விழித்திருந்து
முதல் ஆளாக
பிறந்த நாள் வாழ்த்துச் சொல்வது - நட்பு மட்டும் தான்
உறவுகள் இங்கே உறங்குவதில்லை.

இடறி விழும் போதும்
துயரம் வரும் போதும்
ஆறுதல் தருவது நட்பு மட்டும் தான்
சூழ்ச்சிகள் எதும் இங்கில்லை.

ஈருடலில் ஓருயிராய்
முகம் காட்டும் கைக்கண்ணாடியாய்
இணைந்திருப்பது நட்பு மட்டும் தான்
விரிசல்கள் இங்கில்லை.

தோழியாக தோழனாக - என்றும்
தோள் சேர்ந்து நிற்பது
தோழமை மட்டும் தான்
தோல்விகள் இங்கில்லை.

- மன்சூர் 

Friday, 15 April 2016

சீக்கிரமா வா புள்ள

ஒத்த பனை மரம்
நிழல் தராதுன்னு  போனாயோ

ஓலை குடிசை
ஒழுகுமுன்னு போனாயோ

ஒரு வேளை உணவு
போதாதுன்னு போனாயோ

வெத்து கனவு மட்டும்
பலிக்காதுன்னு  போனாயோ

காடு கழனியெல்லாம்
காஞ்சதுன்னு போனாயோ

என்ன குத்தம் செஞ்சேன்னு
என்னை விட்டு போனாயோ

சாதம் வடிக்கத் தெரியாதே
பசி கூட தாங்க மட்டேன்னே

தனியே படுத்துறங்க
திராணி இல்லையே

உன்னை பார்க்காம
உறக்கமும் வராதே

மாமன் மனசறிஞ்சு
மணக்கும் மரிகொழுந்தே

என்ன குத்தம் செஞ்சேன்னு
என்னை விட்டு போனாயோ

ஊர் கதைப் பேசி
வம்பு வளர்த்தேனா

கள்ளு குடிச்சேனா
களவு செஞ்சேனா

கள்ளத்தனமாக உன்
தங்கச்சிய பார்தேனா

வெட்டியா கடன் வாங்கி
ஊரெல்லாம் திரிஞ்சேனா

என்ன குத்தம் செஞ்சேன்னு
என்னை விட்டு போனாயோ

இரட்டைப் புள்ளை தானே கேட்டேன்

என்- செல்ல சிறுக்கியே
இரட்டைப் புள்ளை தானே கேட்டேன்

ஒத்தப் புள்ள என்னை
ஒத்தையில தவிக்க விட்டு
போனதென்ன - ரோசாவே

மனச மாத்திக்கிட்டு
மல்லிப்  பூ  வாங்கிகிட்டு
அந்தி சாயும் முன்னே
சீக்கிரமா வா புள்ள


- மன்சூர் 

விடியாத இரவு..

சிற்றுண்டி வேளை கசக்குதடி
வெறும் உலையாக
வயிறு கொதிக்குதடி

அடுப்படியில் பூனை உறங்குதடி
சமையலறை பானைகள்
உருளுதடி

முகம் பார்த்த கண்ணாடி அழுகுதடி
விரிசல் விழுந்து
உடையுதடி

வீதியோரம் போனால் நோகுதடி
புழுதியில் விழுந்து - கண்கள்
அழுகுதடி

தொலைபேசியும், நட்பும் தொலைந்து போக
என் நிழலே எனக்கு
மறந்ததடி

கண்ணீரில் தலையணை நனையுதடி
பஞ்சு மெத்தை சுருண்டு
கிடக்குதடி

பகல் கூட இருளாக போனதடி
மின் வெட்டே வாழ்க்கையாக
மாறுதடி

இரவெல்லாம் கனவாக போனதடி
என் வானம் அஸ்தமனம்
ஆனதடி


- மன்சூர்

கலைந்து போன கனவு

எல்லா சீசன்களிலும்
பூத்து கிடந்தாய்
இளவேனிற் காலமாக..

எல்லா புயல்களிலும்
சேர்ந்தே இருந்தாய்
வானிலையாக..

எல்லா பந்தயத்திலும்
ஒன்றாக பயணித்தாய்
வெற்றியாக..

செல்லக் கோபத்தில்
சின்னச் சின்ன ஊடல்களில் மலர்ந்தாய்
புன்னகையாக..

நடுநிசி வரை விழித்திருந்து
பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னாய்
பிரியமாக..

இடறி விழும் போதெல்லாம்
ஆறுதல் தந்தாய்
அன்பாக..

ஈருடலில் ஓருயிராய்
இணைந்திருந்தாய்
உறவாக..

இன்று
கலைந்து போனாயடி
வெறும் கனவாக..

- மன்சூர்


Sunday, 5 April 2015

Soul mates

I was nothing till
They comes into life
They makes me laugh
           makes me cry
           makes my life worthy

Distance is not a matter
Though we were not in touch now
They are not just friends
They are above to all

Thursday, 2 April 2015

செம்பூவே



தீ பற்றாத
பூக்காடோ
உன் கண்கள்

தேய் பிறை இல்லாத
வானமோ
உன் நெற்றி

கந்தகமாகி போன
காந்தங்கள் தானோ
உன் கண்கள்

தொங்கல் தோட்டத்தின்
அனிச்சம் பூவோ
உன் செவிகள்

வண்டுன்னும்
செம்பூவோ
உன் இதழ்கள்

நேசத்திற்காக துடிக்கும்
நெஞ்சமோ - உன்
நல் இதயம்..

- மன்சூர்

உண்மை காதல்


உனக்காக
எழுதி தீர்க்கும் - என்
கவிதைகளை - நீ

கண்டும், காணாமல்
போகும் போது

எனக்காக
அழுது தீர்க்கும் - என்
பேனாவிடம்
பார்கிறேன்

உண்மை காதலை..

- மன்சூர்

கண்மூடி பிறந்த பிழை

கண்ணாளனே ,
உறங்க இடம் வேண்டும்

கண்மணியே,
என் மடியிலா ? கடற்கரையிலா ?

ம் ஹூம், ஆசை தான்
கடற்கரை போதும் எனக்கு

சரி சரி,
அலை வந்து, அள்ளி கொள்ள போகிறது
இன்று வேறு
பௌர்ணமி என்கிறார்கள்

ஏன்? அது
ஆண் அலையா?

அது ஆண் அலையோ? - இல்லை
காதல் வலையோ?
யாருக்கு தெரியும்

அது சரி
பௌர்ணமி எப்படி இருக்கும்

ம்.. பௌர்ணமி??
அது .,
உன்னை போல இருக்கும்

பொய் தானே
நிஜம் தான் அன்பே!

இல்லையென்றால்
உன்னைப் போல் - ஒருத்தியை
பார்த்த பின்பும்
சீறாமல், சீண்டாமல் இருக்குமா
இந்த சிற்றலை ..

சுனாமி என்கிறார்களே
அது ?
ஒ அதுவா
அதுவும்

நம்மை போல தான்
"கண்மூடி பிறந்த - பிறவிப் பிழை"

- மன்சூர்

வாழு; வாழ விடு .

நடை பாதையில்
நானொரு
கையேந்தி விளக்கு

விடியலை காணாத
விழிகள் என்னுடையது

தவிர
நானொன்றும் குருடனும் அல்ல
கையேந்துவது பிச்சைக்கும் அல்ல

என் கரம் பற்றி
வாழ்கையின்
சாலையை கடக்க
கரம் கொடுக்க வேண்டாம்

நான்
கடந்து போகும் நேரத்தில்
நடந்து போகும் பாதையில்
வழி விட்டாலே போதும்

- மன்சூர்

தோழி துணைவியானால்!

அதிகாலை சோம்பல்
சுகமாகும்..

அன்பாலே வீடு
அழகாகும்..

சிற்றுண்டி வேளை
இனிதாகும்..

சின்ன சின்ன ஊடல்
கனிவாகும்..

முகம் பார்க்கும் கண்ணாடி
கல்வெட்டு ஆகும்..

பிரிந்து சேருகையில்
TV remote பகையாகும்..

சமயலறையில்
பாத்திரங்கள் வாய் பேசும்..

படுக்கையறையில்
தலையணைகள் வாய் பேசும்..

தொலைபேசியும், நண்பர்களும்
பகையாகும்..

இரவில் மின்வெட்டு
வரம் அகும்..

ப்ரியமான தோழி
துணைவி ஆகும் போது..

- மன்சூர்

இது தான் வாழக்கை

நேசமில்லா பூவையின்
கூந்தலில்
குடியேறிப் போன

அந்த
வசமுள்ள ரோசா

முள் கொண்ட நேசம்
தெரியாமலேயே
தெருவில் வீழ்கிறது

- மன்சூர்

அம்பு வார்த்தை

கத்திரி வெயில்
கத்தி பார்வை

இஸ்திரி இதழ்கள்
திரி - புருவங்கள்
யாவையும் விட

என் - அன்பு நெஞ்சை.
தைத்ததடி
உன் - அம்பு வார்த்தை

- மன்சூர் 

வாழ்கை - கணக்கு

நட்பை
கூட்டவும்

கூடா - நட்பை
கழிக்கவும்

அறிவை
பெருக்கவும்

வாழ்கையை
வகுக்கவும்

பழக்கிய பள்ளிக்கூடம்

- மன்சூர் 

ஓட்டாண்டி

ஓட்டு கேட்க வரும்
நேரத்திலாவது
சாலைகள் சீரமைக்கப்படும்
என எதிர் நோக்கும்
என் மக்களுக்கு

எப்போது விளங்கும்

அவர்கள்,

ஓடு தளம்

அமைக்கிறார்கள்

நம்மை

ஓட்டாண்டி ஆக்குகிறார்கள் என்று

- மன்சூர் 

இளமையும் /வறுமையும்


வறுமையும்
முரண்பாடும்,

கிழிசலை பூட்டி
கால் வயிற்றுக்காக
கையேந்துகிறது
சாலையோர
சிக்னல்களில்..

கிழிசலை கூட்டி
கால் வயிற்றுக்காக(!)
கூத்தாடுகிறது
வெள்ளி திரை
மேடைகளில்..

- மன்சூர் 

Candy Crush



Babe..

Candy bar பார்வையில் - மனதை

Candle போல் உருக வைத்தாய்

Caramel புன்னகையில் - என்

பாவங்கள் போக்கி வைத்தாய்

- மன்சூர் 

நண்பி

நண்பி இல்லாத உலகம்
எப்படி இருக்கும்!

அதிகாலை சூரியன்
சோம்பல் முறிக்கும் ;

அலுவலக வேலைகள்
அலுத்து போகும் ;

cell phone இரைச்சல் இல்லாமல்
இதயம் கனக்கும் ;

நேசம் கலந்த இதயத்தில்
நிகோடின் பரவும் ;

மதுபான கடைகளும் , மயானமும்
மலர்ச்சியாகும் ;

பூ பூக்கும் சாலைகள்
வறட்சியாகும் ;

பூமியெல்லாம் அன்பு மலர
வீதியெல்லாம் நேசம் செய்வோம் ..

- மன்சூர் 

ஒற்றை பனை மரம்



ஒற்றை பனை மரம் 
ஓலை குடிசை 
ஒரு வேளை உணவு 
உன் மடியில் கனவு 
அமைந்தாலே போதும் - என் 
ஆசைகள் தீரும்

இரட்டை பிள்ளைகள் 
இடைவிடா தொல்லைகள் 
கண்டிக்க நீ 
கனிவு காட்ட நான் 
வாழ்ந்தாலே போதும் 
வசந்தங்கள் மலரும்..


- மன்சூர்

பெண் மனசு

பிரியமான
பெண்ணின் கை பிடிக்க

முதலில்

அவளின்
மனம் படிக்க வேண்டும்

காத்திருத்தல் மட்டுமல்ல ,

விழித்தலும்
வலித்தலும் - அதை
பொறுத்தலும்
தான் காதல்

- மன்சூர்

நட்பு

எல்லா சீசனிலும்
பூப்பது
நட்பு ஒன்று தான்..

எந்த புயலையும்
கடப்பது
friend-ship ஒன்று தான்..

எந்த நேரத்திலும்
நிலைப்பது
தோழமை ஒன்று தான்..

- நான் -
மீள்வதும்
வாழ்வதும்
நட்புக்காக தான் ..

- மன்சூர் 

வாழ்க்கை

பெண்ணே!

என்னை விட யாரும்
உன்னை அன்பு செய்து வெல்ல இயலாது

உன்னை விட யாரும்
என் அன்பை வென்று செல்ல இயலாது

உன்னை புரிதலுக்கே
பாதி வாழ்க்கை
பணயம் என்றால் - நம்
பயணம் தான் எப்போது?

வெறும் புரிதலில் இல்லையடி வாழ்க்கை
பிரியாது இருத்தலும்
பிரியமாய் இருத்தலும் தான் வாழ்க்கை



- மன்சூர் 

மனம் வீசுவோம்

மலர்வதும்
மண்ணில் வீழ்வதும்
ஒரு முறை தான்

மனம் வீசுவோம்
மனிதர்களே

மலர்களாக..

- மன்சூர் 

காதல் காளான்கள்..

காத்திருந்த போதெல்லாம்
கண்டு கொள்ளாத
காதல் பிசாசு

காலம் தாழ்ந்து வந்த
ஒற்றை நொடிக்காக
காலம் கடத்தி போகிறது

காலனின் காலடியில்
காலமாகி போகிறது
என் காதல் காளான்கள்..

- மன்சூர் 

Jessieக்காக..



அன்று - நீ
விழியில்
விழுந்ததற்கு

இன்று - நான்
வலியில் துடிக்கிறேன்

வண்டுண்ணும்
பெண் பூக்களுக்கு,
என்றும்
காதல் செரிப்பதில்லை

(- Jessieக்காக)

- மன்சூர் 

விந்தை

சில சமயங்களில்
Sofa cum Bed போல
நீண்டு போகிறது - என்
நினைவுகள்

சில சமயங்களில்
Window screen போல
விலகி போகிறது
காற்றில்..

சில சமயங்களில்
Wall clock நொடிமுள் போல
கடினமாகிறது - என்
பொழுதுகள்

சில சமயங்களில்
Foot mat போல
புழுதியாகிறது
வாசலில்..

முற்றத்தில்
காத்திருக்கிறேன் -
உன் மு*****காக
பெண்ணே..

- மன்சூர்

வரம் வேண்டும்

வரம் வேண்டும்
நீ எனக்கு மனைவியாய்
இறுதிவரை தோழியாய் வரும்
வரம் வேண்டும்

தினமும் நீ
தூங்கும்அழககை
ரசிக்கும் வரம் வேண்டும் ..

தினமும் மலர் சூடி
உன் நெற்றியில்
முத்தமிடும் வரம் வேண்டும்

அனைவரும் இருக்கும் நேரத்தில்
கள்வனாய் -உன்
இடை கிள்ளும் வரம் வேண்டும் ..
யாரும் இல்லா நேரத்தில்
முத்தத்தில் உன்னை
மூழ்கடிக்கும் வரம் வேண்டும்

குழந்தையாய் நீ
செய்யும் தவறுகளை
ரசிக்கும் வரம் வேண்டும்

யாரும் இல்லா சாலையில்
உன் கைபிடித்து
நடக்கும் வரம் வேண்டும்

மழை நேரத்தில்
ஒரு குடைக்குள் - இருவரும்
செல்லும் வரம் வேண்டும்

மழையில் நனைந்த என் தலையை
புடவை நுனிகொண்டு - நீ
துடைக்கும் வரம் வேண்டும்

என் உயிர் சுமக்கும் - உன்னை
என் கண்ணுக்குள் வைத்து
பார்க்கும் வரம் வேண்டும்

என் உயிர் பிறந்தபின்நாளில்
முதலில் - உன் முகம்
பார்க்கும் வரம் வேண்டும்

தள்ளாடும் வயதிலும்
நீ - என் தோள்
சாயும் வரம் வேண்டும்

நான் மரணித்தாலும்
நீ - தனிமை துயர்
கொள்ளாத வரம் வேண்டும்

ஆதலால்.,

புன்னகை பூத்து
தோள் சாய்ந்து
இருவரும் - ஒன்றாய்
மரணிக்கும் வரம் வேண்டும்

- மன்சூர்

கரு கருவிழிகள்



சிவப்பு ,பச்சை ,நீல வண்ணங்கள்
இருந்தாலும் ..

உன் கருப்பு மையிட்ட
கண்கள் பற்றி - பேச
பற்றவில்லையடி

மற்ற வண்ணங்கள் ..

- மன்சூர்

She




She is a Dreamer and
changing my darkness..

She is a Doer and
molding my faults..

She talks like spring and
inspiring me..

She walks like rain and
left beauty every-time..

She looks like winter and
frozen me by her beauty..

She acts like summer and
pleasing me with her smile..

She is so angelic and
I never get tired of looking at her..

- Mansoor

இப்படிக்கு காதல்..

"Ennai
அறிந்தவர்கள் 
மண்ணாள்கிறார்கள் 

அறியாதவர்கள் 
இப்படிக்கு 

மண்ணாகிறார்கள்

- இப்படிக்கு காதல்.. "


 - மன்சூர்

Friday, 7 March 2014

செல்லுலாயடு

செல்லரித்து போன
செல்லுலாயடுகளின்
மிச்ச சொச்சம் - நான்

மங்கி போவேனோ
மருகி போவேனோ
நிச்சயம் தெரியவில்லை

ஒருநாள்
மறித்து போவேன்
என்பது மட்டும் திண்ணம்

மௌனங்களால் - என்
மயானத்தை
நிரப்பாதீர்கள்

கண்ணீரால் - என்
கல்லறையை
கரைக்காதீர்கள்

முடிந்தால்
என்னை
மன்னித்து விடுங்கள்

முடிந்த வரை
என்னை
மறந்து விடுங்கள்


- மன்சூர்

காணல் நீர்

திணை பெயர்ந்தேன்
திரவியம் தேட

தேடல் - முடிவிலி

துணை பெற்றேன்
தன்னிலை துறக்க

துறவு - முடிவிலி

தடம் தொலைந்து
திசை மறந்து
உற்றார் தொலைத்து
உறவுகள் துறந்து
உயிர் சுமக்கும்
உரி பறவை  - நான்
போக வழியின்றி
போக்கிடம் அறியாது
காணல் நீருக்காய்
காத்து கிடக்கின்றேன்

- மன்சூர்

Friday, 21 February 2014

குஸ்கா

கைகலப்புக்கும்
கலகலப்புக்கும்
இடையிலான - என்
காதல்
திருமணத்தில்

குஸ்கா மட்டுமே
இருக்கிறது
என அறியாமல்
குஷியாக அமர்ந்து
பிரியாணிக்கும், pieceகும்
plan பண்ணும்
பிரியமான நண்பர்களிடம்

யார் சொல்வதோ ?
யார் சொல்வதோ?

- மன்சூர் 

தாய் மடியே

தாய் மடி போல்
இல்லை
தலையணை உறக்கம்..

அரவணைப்பை போல்
இல்லை
போர்வையின் இறுக்கம்..

கைவிரல்கள் போல்
இல்லை
மயிலிறகின் வருடல்..

தலை துவட்டி விட
காதல் மனைவி இருந்தாலும்
அம்மாவின்
சேலை தலைப்பை போல் வாராது..

- மன்சூர்

அன்புள்ள அம்மா

அன்புள்ள அம்மா,

கர்ப்ப காலத்தில்
எட்டி உதைத்த போதெல்லாம்
பொறுத்(தாய்!)

ஆண் பிள்ளை - என்
கன்னத்தில் மையிட்டு
கண்மணியாக வளர்த்(தாய்!)

எப்போதும்
எனக்காகவே
வாழ்ந்(தாய்!)

எனக்கான
கனவுகளை - நீயே
சுமந்(தாய்!)

உறங்கும் போதும் - என்
கைவிரல் பிடித்து கொள்கிறாய்
உனக்கே தெரியாமல்
நான் வேறொரு கை பிடித்ததை
நீ அறியாமலேயே..

- மன்சூர் 

SHE is special


SHE is special to me
SHE filled my empty heart
SHE refilled my lonely life
SHE fulfilled my birth completely

SHE is special to me
SHE is special to me

who make me too lovable
who made me so enjoyable
who is very close to my heart

- manSoor 

காதலிக்க நேரமில்லை

உனக்கான
networkல்
உனக்காக
தனி sim வாங்கி
உனக்கென்று
ringtone set செய்து
உன் numberக்கு
dial செய்யும் போதெல்லாம்,
உனக்கான
தேவைகளில் busyயாகி போகும்;
எனக்கான
உன்னை துரத்தி துரத்தி
நேசிக்கிறேனே

நமக்கான
நேரம் என்று
எப்போது வரும் பெண்ணே ?


- manSoor 

பள்ளிக்கூடம்

தலையெழுத்துக்கான
கையெழுத்தைப் பழகிய கற்காலம்

துள்ளியோடி
ஆட்டம் போட்ட
கார்காலம்

புதுமுகங்கள்
அறிமுகமாகி
நட்பெனும்
துறைமுகம் சேர்ந்த
வசந்த காலம்

பழகியதோ
சில காலம்
கனவுகளில்
உயிர் வாழும்
நினைவுகளின்
பொற்காலம்..


- மன்சூர் 

பாசமுள்ள உறவுகள்..

தலையணைக்கும் 
தாய் மடிக்கும் 
போட்டியிட்டு 

தாய் வீட்டு 
சீதனத்தில் 
பங்கு கேட்டு 

தாய் மாமன் சீர்வரிசையில்,
மடியில் வைத்து 
மருகனுக்கு சடங்கு செய்யும் 

பாசமுள்ள 
உறவைப் போல் 
உலகில் இல்லை..


- மன்சூர் 

அம்மா..

Affection & Care is incomplete without U
Meaning for sacrifice is U
Meaning of inspiration is U
Always loving U
AMMA..

- manSoor 

மேலானது

கண்ணில்லாத காதல்

சிந்தை இல்லாத சொந்தம்

நன்றி இல்லாத
நட்பை விட

கூன் - குருடு - செவிடு - பேடு

எவ்ளவோ மேல்

- மன்சூர் 

I love you _madly

I still love you.
I still miss you.
I still need you.

I still dream of you.
I still care for you.
I just wish I could tell you.

I want to be yours
Not for a day,
Not for a year,

For a lifetime
I love you madly

- manSoor

ஜெய்ஹிந்த்!

நீ -
தொல்லையின்றி உறங்க தான்
எல்லையில் விழித்திருக்கிறோம்

அதிகாலையில்
உனக்கு
பகலவனின் தரிசனம்
எனக்கோ
பகைவனின் தரிசனம்

நெற்றி வியர்வை சிந்தினால் தான் - உன்
வயிறு நிறையும்
எனக்கோ
போரில் ரத்தம் சிந்தினால் தான்
மனம் நிறையும்

தீபாவளி, பண்டிகைகளில்
பட்டாசு வெடிக்கும்
இங்கே
திரும்பும் திசைகளில் எல்லாம் i
பட்டாளம் தெறிக்கும்

ரம்ஜான், விருந்துளில் எல்லாம்
மாமிச தலை உருளும்
இங்கே
ராத்திரி, பகல் முழுதும்
மானுட தலை உருளும்

நீ
நேசத்தை விளைவிக்க தான்
நாங்கள்
எல்லையில் வி(பு)தைக்கப்படுகிறோம்
JAIHIND!

- மன்சூர் 

கந்தல்

நான் ஒரு காகிதம்

தாயின் கையில்
கனவு கப்பலானேன்

தண்ணீரில் விட்டால்
தத்தளிப்பேன் என்று - தன்
கண்ணில் வைத்து கொண்டாள்
கத்தி கப்பல் என்று
அறியாமலேயே!

இன்றோ

காதலி கையில் பட்டமாகி
காற்றில் பறக்கின்றேன் - அவள்
அறுந்து போவேனோ என
இறுக பிடித்திருக்கிறாள்
நூலை விடாமல்

நான்
வாலறுந்த பட்டம் என
அறியாமலேயே!

நண்பர்களோ
கிறுக்கி வைத்த கவிதையென்று
ஊர் சொல்லி திரிகிறார்கள் - நான்
எழுத்து பிழையென
அறியாமலேயே

நானோ

கழுதை கூட
கண்டுகொள்ளாத
கந்தல் என்று
அறியாமலேயே!

- மன்சூர் 

பாவி மரம்

விதைத்து
தண்ணீர் விட்டு
ஆசையாய் வளர்த்த
பிள்ளை செடி

நீண்டு நெடுமரம் ஆன போது
மலர்ந்த அன்னை நெஞ்சம்

கொண்ட நேசத்தால்
வேலி தாண்டி
கிளை போகும் போது

வெட்ட மனமில்லாமல்
கண்ணீர் சிந்தும்
கருணை மனமே

உன் கண்ணீர் பட்டு கூட
பட்டு போகும் - இந்த
பாவி மரம்

- மன்சூர் 

காதல் மோதிரம்

நகம் கடிக்கிறேன் - என்
கவிதை விரலுக்கு
காதல் மோதிரம்
போடுவாயோ பெண்ணே?

அரிவாள் முறைக்கிறது - என்
கழுத்துக்கு மச்சான்
மைனர் சங்கிலி
போடுவாரோ பெண்ணே?

கண்கள் வேர்கிறது  - என்
கையில் சேர்வாயோ
காதல் பெண்ணே?

- மன்சூர்


'அவள்'

தீ பற்றாத
பூக்காடோ
உன் கண்கள்

தேய் பிறை இல்லாத
வானமோ
உன் நெற்றி

கந்தகமாகி போன
காந்தங்கள் தானோ
உன் கண்கள்

தொங்கல் தோட்டத்தின்
அனிச்சம் பூவோ
உன் செவிகள்

வண்டுன்னும்
செம்பூவோ
உன் இதழ்கள்

நேசத்திற்காக துடிக்கும்
நெஞ்சமோ - உன்
நல் இதயம்..

- மன்சூர்

ஒன்று சேர

உன் கோபம் -நீ
எனக்காக பிறந்தவள் என்று
நம்பிக்கை தந்தது

உன் புன்னகையோ -நீ
எனக்காக மட்டுமே பிறந்தாய் என்று
உறுதி செய்தது

எத்தனை முறை சண்டையிட்டாலும்
சண்டைக்கான காரணத்தை
மறக்கடிக்கும் உன் தூக்கமும்

எத்தனை முறைத்து கொண்டாலும்
உன்னையே தேடும்
என் கனவும்

ஒன்று சேரத்தான்
விழித்திருக்கிறேன்..

- மன்சூர்

பிரார்த்தனை

எல்லா கிழமைகளிலும்
பிள்ளைகளுக்காக
பிரார்த்தனை செய்யும்
பிரியமுள்ள அம்மாவிற்கு ..

உன்னோடு சேர்த்து
என்னை
கண்டிக்கவும்

எனக்கான
உன்னை
நேசிக்கவும்

இன்னொரு ஜீவன்
இணையப்போகிறது
நம் வீட்டில்

எனக்கான
உன் கவலைகள்
ஓய்வு பெற

விளிக்கின்றேன்
வெள்ளிக் கிழமையின்
வேண்டுதலாக ..

- மன்சூர்

மாமன் மனசு

பெண்ணே!

கூந்தலேறி
மணம் வீசும்
வாடா-மல்லி
மாமியின் மனம்
சொன்னதே

இந்த
மாமனின் மனம்
சொன்னதா?

- மன்சூர்

சுனாமி பெண்ணே

என்னை
கொண்டு போகவும்

கொன்று போகவும்
நீ இருப்பதாலேயே

கரை மேலே
காத்திருக்கிறேன்

உனக்குள்
என்னை
வாங்கி "கொல்"
சுனாமி பெண்ணே ..

- மன்சூர்

உரிமைப்போர்

அன்று

கட்டிப் பிடித்து உறங்க
தாய்

நேற்று
தலையணை

இன்று
மனைவி

நாளை
மகளும் - மனைவியும்

உறவுகள் தொடரும்
உரிமைப்போர்

- மன்சூர் 

ஒரு வார்த்தை

உடைந்து
உருக்குலைந்து வரும் போதெல்லாம்

உயிர் மீட்கும் - உன்
ஒரு வார்த்தை

"செல்லமாய்
சிநேகமாய் "
செவி குளிர
நீ கூறும்
நேசமிகு ஒரு வார்த்தை

ஆயுள் முழுதும்
அன்பு செய்ய
ஆணையிடும்
அமுத வார்த்தை

என்
பிறவிப் பலன்
அடைகிறேனடி அன்பே!

- மன்சூர்

கைமாறு..

உயிரில் கலந்த உறவே,

அலைபேசியில்
அன்பை பொழிகிறாய்!
கடைக் கண்களால்
கவிதை சொல்கிறாய்!
புருவங்களை உயர்த்தி கொண்டு
புன்னகை செய்கிறாய்!

தாய் - தந்தை
தோழன்
யாவரும்
கடிந்திடும் வேளையில் கூட
கொண்ட காதலால்
கனிவு பூக்கிறாய்..

கைமாறாய்
காதல் செய்கிறேன்
கண்மணியே..

- மன்சூர் 

beyond mY control..

Our meeting may be a fate
Our friendship may be a choice
But
Falling in love with you
is beyond my control

U make me a complete man
Ur love makes me perfect
Ur affection which changes my world
and
I'm in-complete without U..

I Love You
I Love You
I Love You
my dear
lovable love..

- manSoor

வண்டுன்னும் பூக்கள்!

வண்டுன்னும் பூக்கள்.,
சில நேரம் 
வாய் திறப்பதே இல்லை

மகரந்தம் போல - அவை 
மனசுக்குள் தூது வரும் 
இறுதியில்,
ரீங்காரமிடும் வண்டுகளோ .,
                                                      
மவுனத்தை
விடுவதில்லை...

சப்தமிடும் வண்டையும் 
மதிப்பதில்லை..

தென்றலையும் 
ஏற்பதில்லை..

முட்களின் மேல் காதல் பூத்து 
தேனில் மூழ்கி மூர்ச்சையாகிறது..

- 
மன்சூர்



தூர தேசம்..

மனிதரில்லா
தூர தேசம் தேடி
தொலைய வேண்டும்

காதல்,
கவலை

யாவும்
நீங்கி

நீட்சி பெற வேண்டும்..

- மன்சூர்

மேலானது..

கண்ணில்லாத காதல் 

சிந்தை இல்லாத சொந்தம் 

நன்றி இல்லாத நட்பை விட 

கூன் குருடு செவிடு பேடு 

எவ்ளவோ மேல்

- மன்சூர் 

பிரியமானவள்..

"பிரியமுள்ள
பெண்ணொருத்தி வேண்டும் .."

என்
அளவில்லா அன்பை
பங்கு போட

அர்த்தமுள்ள கோபத்தை
நேசிக்க

ஆழமான மௌனத்தை
புரிந்து கொள்ள

சின்ன சின்ன
ஊடல்களில்

செல்லமான
கோபங்களில்

பிரிந்து - சேரும்
தருனங்களில்

பிரியமாய்
கட்டிக்கொள்ளும்

பிரியமான - ஒரு
பெண் வேண்டும் ..

- மன்சூர் 

Friday, 8 November 2013

மா மனிதன்..

அணுவை துளைத்தான் 

அதை 
வெடித்து களைத்தான் 

பின்பு 
அழுது சலித்தான் 

அணு அணுவாய் 
அமைதி தொலைத்தான் 

அறிவியல் படித்த
மா மனிதன் 

- மன்சூர்

சேலையில் ஒரு தேவதை!

சேலை கட்டும் பெண்களில் 
அவள் மட்டும் 
தனி அழகு!

அவள்..
சேலையணிந்து சென்றால் 
துணிக்கடை பொம்மையும் 
உயிர் பெறும்!

வீதியுலா சென்றால் 
சாலையோர மனிதரெல்லாம் 
சிலையாய் மாறக் கூடும்!

அவளை கடந்து செல்லும் 
தென்றல் கூட 
உறைந்து போகும் பனியாக!

என்னவாக போகிறேனோ 
இன்னும் கொஞ்ச நாளில் நானும் ?

- மன்சூர்

மல்லிப்பூ ..

நடு நிசியில் 
மலர்ந்து 

நூற்பாவில் 
சேர்ந்து 

நடைவீதியில் 
கடை பரப்பி 

உன் கண்ணில் 
விழுந்து 

நீயும்
வாயாரக் கேட்டு 

நானும் 
மனதார வாங்கி 

என் கையாலேயே 
சூட 

"ஈ"யென பல் இளிக்கிறது  

உன் கூந்தலேறிய 
மல்லிப்பூ ..


- மன்சூர் 

தோள் சாய வா பெண்ணே!

கால் வலிக்க நடை பழகி 
களைப்பாகி போனாலும் 

இளைப்பாற 
தோள் சாய்வாய் பெண்ணே!

மழையோடு நீயிருந்து
குடையோடு நானிருந்தும் 

தலை துவட்ட 
தோள் சாய்வாய் பெண்ணே! 

எதிர் வரும் காலங்கள் 
எதிர்க்கின்ற போதிலும் 

இமைக்காமல் 
தோள் சாய்வாய் பெண்ணே! 

நேசமோ - நட்போ 
உயிர் போகும் ஒருநாளில் 

அழைக்காமல் 
தோள் சாய்வாய் பெண்ணே!

- மன்சூர்

அணு அணுவாய்..

DYNAMITE..

அறிவியலின் 
புதிய DIMENSION 

Alfred ன் 
அறிய INVENTION 

ஊக்கமற்ற 
ஊதாரிகள் 

அழிவுக்கு உட்படுத்தும் 
ஆக்கமுற்ற அறிவியல் 

அன்று..
முதலாம் உலக போரில் 
அமெரிக்கனும் ஜெர்மானியனும் 
வெடிக்க .,

இன்று

ஆத்திகனுக்கும் , நாத்திகனுக்கும் 
அரசாட்சிக்கும் ,  ஜனநாயகத்துக்கும் 
இயற்கைக்கும் , அறிவியலுக்கும் 
இடையேயான 
மரணப் போராட்டம் தான் 
வாழ்க்கை 

அணுவை துளைத்தான் 
அணு அணுவாய் 
அமைதியை தொலைத்தான் 
அறிவியல் படித்த
மா மனிதன் 

- மன்சூர் 



Thursday, 7 November 2013

பிறவி பயன்

அதிகாலையில் 
உன் குரல் 

cell phone இல் 
உன் sms  

அந்தி மாலையில் 
உன் வருகை 

நடு நிசியில் 
உன் கனவு 

ஆறுதலில் 
உன் கைகள் 

உனக்கான 
என் சமையல் 

கன்னக் குழியில் 
புன் சிரிப்பு 

கடைசி வரையிலும் 
உன் அன்பு 

போதும் பெண்ணே 
பிறவி பயனடையும் 
என் நேசம்!

 - மன்சூர் 

a "special gift"


I like your looking
Specially 
your specs eyes

I like your charming
Specially
your cute smile

I like your dressing
Specially 
your pink chudi

I like your cooking
Specially
that prawn fry

I like your speaking
Specially
your tamil slang

I like your gifting
Specially
the pinches 

- மன்சூர் 

ஓடி பழகலாம் வா பெண்ணே..



முதலாம் வயதில் 
தவழ ஆரம்பித்தோம் 

மூன்றாம் வயதில்
நடை பயில ஆரம்பித்தோம் 

இன்று
அகவை - முந்நூறு மாதங்கள்

ஓடி பழகலாம்
வா பெண்ணே!

- மன்சூர்

Thursday, 31 October 2013

பாலை

நீந்த தெரியாத பாலைவன-கப்பல்
நேசிக்க தெறியாத இதயம் 

இரண்டுக்கும்
சஹாரா தான் உலகம்

- மன்சூர் 

கனவு தேசம்

ஆட்டையை போடும் அறுபதுகளும் 
அரட்டை அடிக்கும் இருபதுகளும் 
சீராகும் வரை 

சீராகாது 
நம்-தேசம் 

-மன்சூர்

மௌனம்..

இங்கே சிலர் .,

வார்த்தைகளை 
விழுங்கி கொண்டு 

மௌனங்களின் 
புளித்த ஏப்பம் விடும் 

நண்பர்கள் 

- மன்சூர்

கவிதையின் ருசி

காகிதங்களை ருசிக்கும்
கோவேறுகளுக்கு 

தெரியாது
கவிதையின் ருசி 

- மன்சூர் 

ஏழையின் சிரிப்பில் ...

பசித்தோர்க்கு இலையிட்டு 
அவர்-தம் புன்னகையில் 
தெரியாத இறைவனையா?

வெறும்
கல்லுக்கு பாலூற்றி 
தேடுகிறாய் மா மனிதா!

- மன்சூர் 

faceBook

faceBook(முகநூல்)

தன் பதிவுகளுக்கு தானே 
வலிய வந்து விருப்பம் தெரிவிக்க கோறும் 
விந்தையான சந்தை!

போலி முகமூடிக்கு பின்னாலிருந்து 
சொற் போர் புரியும் 
பல அற்பங்களும் இங்கே உண்டு 

முகமூடி அணிந்து கொண்டு
மட் போர் புரியும்
சில சிற்பங்களும் உண்டு

சிலருக்கு
இது வேடிக்கை

பலருக்கும் இதுவே
வாடிக்கை

இங்கே
பெண்களின் நிழற் படங்களுக்கு கூட
பாதுகாப்பு இல்லை

ஆபாச சந்தையில்
அவற்றை
கூறு போட்டு விற்கின்றன சில
கூறு கேட்ட குப்பன்கள்

faceBook
நீச்சல் தெரிந்தவர்கள்
மூழ்கி போகும்
பாசி படிந்த
குட்டை

- மன்சூர்

நேசம்..

நேசத்தை விட்டு கொடுத்தேன்

தவிர

உன்னை 
நேசிப்பதை அல்ல

பெண்ணே ..

- மன்சூர் 

காதல் - திருவிளையாடல்

பிரிக்க முடியாதது
நீயும், உன் கோபமும்

பிரிய கூடாதது
நீயும், உன் குணமும்

சேர்ந்தே இருப்பது
சிரிப்பும், சிங்காரமும்

சேரக் கூடாதது
அழுகையும், அகங்காரமும்

சொல்ல கூடாதது
உன்னிடம் காதலை

சொல்லக் கூடியது
உன்னிடம் ரகசியத்தை

பார்க்க கூடாதது
உன் கண்கள்

பார்த்து ரசிப்பது
உன் கூந்தல்

ரசனை என்றால்
உன் சமையல்

சண்டைக்கு
நீ

நட்புக்கு
நான்

அழகுக்கு
நீ

அன்புக்கு
நான்

********

- மன்சூர் 

வின்னை தாண்டி வருவாயா?

பார்வையால் அறிமுகம் ஆனோம்,
மௌனங்களால் பேசிக் கொண்டோம்,

நெடுஞ்சாலை தூரம் எல்லாம் 
கை கோர்த்து நடந்து சென்றோம்,

சிறு சிறு சண்டைகளில் 
பிரியாமல் நேசம் செய்தோம்,

கண்முன் பேசாமல் 
கனவுகளில் சிநேகம் செய்தோம்,

உறவுகளிடம் அனுமதி வாங்கி,
ஆயுள் வரை அன்பு செய்ய
இதயம் துடிக்கிறது - உன்னை
வெளியே அழைக்கிறது

வீடு தாண்டி வருவாயா ?

- மன்சூர்

கொலைஞன்

பூக்களை
கொய்கிறான்

கொலைஞன்

காதல்
பூத்திட..

- மன்சூர் 

நெல்லை அல்வா

சுவைத்தால் மணக்கும்
மனதை உருக்கும்
உமிழ்நீர் சுரக்கும்
சுவையின் அதிசயம்

தாமிரபரணி ஆற்றுத் 
தண்ணீரோ
இல்லை
தாய் மனம் கொண்ட
பக்குவமோ

அத்தை வீட்டு சீதனம் போல் சுவைக்கும்
அல்வாவை
என்னவென்று சொல்வது? 

- மன்சூர்